புதிய வகை கொரோனா; கடுமையான சவால்களை எதிர்கொள்கிறோம்: சீனா அதிபர்| A new type of corona; Facing serious challenges: China President

பீஜிங்: சீனாவில் கொரோனா புதிய கட்டத்தில் இருக்கிறது; சீனா கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளதாக சீனா அதிபர் ஷீ ஜிங்பிங் கூறியுள்ளார்.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, ஷீ ஜிங்பிங் சீனா மக்களுக்கு ஆற்றிய உரை: 2023ஆம் ஆண்டு புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்றேன். 2022ம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் 20ஆவது தேசிய மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது.

உலகளவில் 2ஆவது பெரிய பொருளாதார நாடாக, சீனா தொடர்ந்து நிலை நிறுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் சீராக வளர்ந்து வருகிறது. உலகளாவிய உணவு நெருக்கடியைச் சந்தித்த போதிலும், சீனாவின் தானிய விளைச்சல் சிறப்பாக உள்ளது.

தற்போது நோய்தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு புதிய கட்டத்தில் உள்ளது. கடுமையான சவால்களை எதிர்கொள்கிறோம். இந்நிலையில் அனைவரும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு, நம்பிக்கை மற்றும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இதையடுத்து வெற்றி உறுதியாக கிடைக்கும்.

latest tamil news

இளைஞர்கள் சீனாவின் நம்பிக்கையாகும். சீனாவின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பொறுப்பு தேவைப்படுகிறது. இளமையில் உயிராற்றல் மற்றும் நம்பிக்கை நிறைந்திருக்கிறது. இளைஞர்கள் நாட்டுப்பற்றுணர்வு, நல்ல பண்பு மற்றும் போராட்ட எழுச்சியுடன் ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்தி முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.