நாளை இந்திய அறிவியல் மாநாடு…பிரதமர் மோடி தொடங்கி வைப்பு!

நாக்பூரில், இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

இந்திய அறிவியல் மாநாடு கடந்த 1914-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த வரிசையில் 108-வது மாநாடு நாக்பூரில் உள்ள ஆர்.டி.எம். பல்கலைக்கழகத்தில் நாளை தொடங்கி 7-ந்தேதி வரை நடக்கிறது.

‘பெண்களுக்கு அதிகாரமளித்தலுடன் கூடிய நிலையான வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்துறையின் உயர் மட்டங்களில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சிகளும், புகழ்பெற்ற பெண் விஞ்ஞானிகளின் விரிவுரைகளும் மாநாட்டில் இடம்பெறும். இதைத்தவிர குழந்தைகள் அறிவியல் மாநாடு, விவசாயிகள் அறிவியல் மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த மாநாட்டை பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். இந்த தகவல்களை பிரதமர் அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து உள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.