சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அருகருகே அமர்ந்தனர்.
அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
எனவே, ஓபிஎஸ் வகித்து வந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் உதயகுமாரை நியமிக்குமாறு சபாநாயகரிடம் ஆபிஎஸ் தரப்பினர் கடிதம் அளித்தனர்.
ஆனால், இதுவரை ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பில் இருந்து நீக்கப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இதுதொடர்பாக சபாநாயகர் இதுவரை முடிவு எடுக்கவில்லை.
அக்டோபர் மாதம் நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் வழக்கம்போல எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கான இருக்கையில் ஓபிஎஸ் அமர்ந்திருந்தார். இதனால் எதிக்கட்சி துணைத் தலைவராக உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரி அதிமுகவினர் முழக்கம் எழுப்பினர்.
இந்நிலையில், இன்றும் வழக்கம்போல எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு அருகே ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருக்கை ஒதுக்கப்பட்டது. சட்டமன்றம் ஆரம்பித்ததும் உள்ளே வந்து தனது இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்தார்.
அதேபோல எடப்பாடி பழனிசாமியும் அவருக்கு அருகே அமர்ந்தார். ஆனாலும் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் அமர்ந்திருந்தனர்.
newstm.in