கண்டிப்பாக சொன்னதை செய்தே தீருவேன்.. சீமான் பேட்டி..!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் சகோதரி மகளின் திருமணம், நாகர்கோவிலில் நடந்தது. இந்த திருமண விழாவில் கலந்துகொண்ட பின்னர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஈரோடு இடைத்தேர்தல் குறித்து சீமானிடம் எழுப்பிய கேள்விக்கு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும். இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்பது மாய தோற்றம். மக்கள் மாற்றத்தை விரும்பினால் யாரை வேண்டுமானாலும் தூக்கி வீசலாம்.

மக்களுக்கு நாங்கள் காசு கொடுக்கப் போவதில்லை .ஆனால் அதிகாரிகள் துணையோடு காசு கொடுத்து வருகிறார்கள். கடைசி மூன்று நாட்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று எங்களிடமே கூறுகிறார்கள். நான் யாருடனும் கூட்டணி சேர மாட்டேன். கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்துள்ளது அவரது தனிப்பட்ட கொளை. நான் யாருடனுடம் சேர மாட்டேன். அது எனது கொள்கை என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேனா நினைவு சின்னம் பற்றிய கேள்விக்கு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ஏற்கனவே சிலை வைக்கப்பட்டுள்ளது. மதுரையில் அவரது பெயரில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கடலுக்குள் பேனா வைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. கடலின் நிலப்பரப்பை நிரப்பி பேனா வைப்பதாக கூறுவது கண்டிக்கத்தக்கது. கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் வைப்பது குறித்து பேசியது தனது கருத்து இல்லை மக்கள் கருத்து. ஏற்கனவே நாம் தமிழர் கட்சி மக்கள் பிரச்சனைக்காக போராடி வருகிறது.

கருணாநிதி சிலையை வைப்பது தொடர்பாக பணி தொடங்கப்பட்டால் போராட்டம் நடத்தப்படும். அதிகாரம் எங்கள் கைக்கு வரும்போது அதை உடைப்போம் என்றேன். அதிகாரம் ஒரே ஒருத்தருக்குப் பட்டயம் போட்டு வைக்கவில்லை. அந்த அதிகாரம் என் கைக்கு வரும்போது நான் உடைப்பேன். அவர்கள் சிவாஜி சிலையைத் தூக்கினார்கள். முன்னதாக கண்ணகி சிலையை தூக்கினார்கள். அதுபோல நாங்களும் பேனா சிலையைத் தூக்குவோம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.