ஏகே 62 படம் குறித்த செய்திகள் தினம் வெளியாகி வரும் சூழலில், அவரை ஏற்கனவே இயக்கிய நட்சத்திர இயக்குநர் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தை, விக்னேஷ் சிவன் இயக்குவதாக உறுதி செய்யப்பட்டது. அந்த படத்தை நெட் பிளிக்ஸ் வாங்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
ஆனால் தற்போது அதில் பல குழப்பங்கள் நிலவுகின்றன. விக்னேஷ் சிவன், முழு ஸ்க்ரிப்டையும் தயார் செய்யவில்லை என்றும், அதனால் தயாரிப்பு நிறுவனம் அதிருப்தி அடைந்து, வேறு ஒரு இயக்குநரை வைத்து படம் இயக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, மகிழ்திருமேனி அடுத்த அஜித் படத்தை இயக்குவதாக பரவலாக பேசப்படுகிறது. மகிழ் திருமேனி, தடையற தாக்க, மீகாமன், தடம், கலகத்தலைவன் ஆகிய படங்கள் மூலம் கவனம் பெற்றவர்.
இவர் ஏற்கனவே விஜய்க்கு கதை சொல்லி இருந்தார். அதையே தற்போது அஜித்துக்கு ஏற்றமாதிரி மாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்போட்டியில் இயக்குநர் வெங்கட் பிரபுவும் இணைந்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இவர் ஏற்கனவே அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கினார். மங்காத்தா மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
newstm.in