இந்தியாவில் முதல் முறையாக லித்தியம் உலோகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு, நாட்டில் உள்ள கனிம வளங்களை கண்டறிய பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட ஆய்வில் லித்தியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரைசி மாவட்டத்தில் சலால்-ஹைமனா பகுதியில் லித்தியம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக 5.9 மில்லியன் டன் லித்தியம் அந்த பகுதியில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் மின்சார வாகனங்களுக்கான லித்தியம் பேட்டரி இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா தற்போதுவரை லித்தியம் பேட்டரிகளை சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. மட்பாண்டங்கள், கண்ணாடி, மருந்து கலவைகள், காற்றுச்சீரமைப்பிகள் மற்றும் அலுமினியம் உற்பத்தியில் லித்தியம் பயன்படுத்தப்படுகிறது.
இது அடர்த்தி குறைவான உலோகம் என்பதால், ஒரு கிலோவிற்கு மேல் ஆற்றல் சேமிப்பு திறன் கொண்டது ஒரு டெஸ்லா கார் 600 கிலோ லித்தியம் அயன் பேட்டரியில் இயங்க முடியும். அதே, ஈய-அமில பேட்டரிகளை பயன்படுத்தினால் 4000 கிலோ தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in