ஆறு வழிச்சாலை பணிகள் – முதலமைச்சர் கடிதம்!!

ஆறு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டைஉள்ளிட்ட மாவட்டங்களை இணைக்கும் சென்னை – ராணிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், சமீபத்தில் இந்த மாவட்டங்களுக்குச் செல்லும்போது தாம் ரயிலில் பயணிக்க நேரிட்டதாகும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த சாலையை மேம்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் எம்.பி. வலியுறுத்தியபோது தாங்கள் அளித்த உறுதியற்ற பதில் வருத்தமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்கத் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், ஆனால் நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என மத்திய அமைச்சர் கூறிய பதில் துரதிர்ஷ்டவசமானது எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சாலைப் பணிகளை விரைந்து முடிக்கத் தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பும் வழங்கி வருவதாகவும்,சென்னை – ராணிப்பேட்டை இடையேயான தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஸ்ரீபெரும்புதூர் – வாலாஜாபேட்டை 4 வழிச்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டதற்கு ஒப்பந்ததாரர்களுக்கும் நெடுஞ்சாலைத்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையே காரணம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.