
விஷால், சமந்தா, அர்ஜுன் நடித்த ’இரும்புத்திரை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பி.எஸ்.மித்ரன். இந்த பட்டாடை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த’ஹீரோ’ படத்தை இயக்கினார். இதையடுத்து கார்த்தி நடிக்கும் ’சர்தார்’ படத்தை அவர் இயக்கினார். இந்த படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. மக்கள் சர்தார் படத்தை கொண்டாடினர்.
இரும்புத்திரை படத்தில் டெக்னாலஜி திருட்டு பற்றி படம் எடுத்த மித்ரன் ஹீரோ படத்தில் அறிவுத் திருட்டு கதையை படமாக இயக்கி இருந்தார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான கார்த்தியின் சர்தார் படத்தில் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் தண்ணீரால் ஏற்படும் பிரச்சனை குறித்து ஆழமாக பேசியிருந்தார்.
இந்நிலையில், இயக்குநர் பி.எஸ். மித்ரனுக்கும் சினிமா பத்திரிகையாளர் ஆஷமீரா ஐயப்பன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில், இன்று திருமணம் நடைபெற்றது. இயக்குநர் பி.எஸ். மித்ரன் திருமணத்தில் ஆடை பட இயக்குநர் ரத்னகுமார், அயலான் பட இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர். அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
