சென்னையில் நாளை அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் சார்பில் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை அறிவியல், தொழில் நுட்ப பிரிவில் பட்டம் ஆகிய கல்வித்தகுதி உடைய அனைவரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் முகாமில் கலந்து கொள்கின்றன.
பல்வேறு காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் இல்லை.
கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை முகாம் நடைபெற உள்ளது.
வேலை தேடுபவர்கள் மற்றும் வேலை அளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் www.tnprivatejobs.tn.gov.in பதிவேற்றம் செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in