சந்திராயன் -3 ன் ஆரம்பகட்ட சோதனை வெற்றி! இஸ்ரோ அறிவிப்பு!

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன் -2 விண்கலம் அனுப்பட்டது. நிலவில் தரையிரங்க 2 கி.மீ தூரமே இருந்த நிலையில் விக்ரம் லேண்டருடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அதன்பின்னர், பலமுறை முயற்சித்தும், விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இதனால் இந்தத் திட்டம் வெற்றி பெறவில்லை. இதனையடுத்து சந்திரயான் -3 திட்டத்தை இஸ்ரோ கையிலெடுத்தது. இந்தியாவின் நிலவு பயணத்தை ஆய்வு செய்யும் சந்திரயான் 3 விண்கலத்தின் ஆரம்பக்கட்ட சோதனை பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் நடைபெற்று வந்தது.

கடந்த ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை நடைபெற்ற இந்த சோதனையானது வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கிறது. இந்த சோதனையானது செயற்கைக்கோள்களை செயல்படுத்துவதில் ஒரு முக்கிய மைல் கள் என்று இஸ்ரோ கூறியுள்ளது. சந்திரயான் 3 விண்கலம் உந்து விசை, லேண்டர் மற்றும் ரோவர் என 3 முக்கிய தொகுதிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக தொகுதிகளுக்கு இடையே உள்ள ரேடியோ அலைவரிசை தொடர்பு இணைப்புகளை நிறுவுவதற்கான சிக்கலான பணிகளை மேற்கொள்ள இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திராயன் – 2 விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் இதில் இருக்காது என்றும் சந்திராயன் -3 விண்கலம் மிக வலிமையானதாகவும், இதில் ஒரு கருவி பழுது அடைந்தாலும் அதன் பணியை மற்றொரு கருவி முன்னெடுத்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் சந்திராயன் 3 வருகின்ற ஜீன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்றும் விளக்கமளித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.