டெல்டா பகுதி விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்..!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திமுக பிரமுகர் பாலசுப்பிரமணியன் இல்ல திருமண விழாவை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாநிலங்கள், நாடுகளுக்கு சென்றிருந்தாலும் திருவாரூர் வந்துள்ளது இனம் புரியாத மகிழ்ச்சி என்று பெருமிதம் தெரிவித்தார்.

விவசாயிகளுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் கூறிய முதலமைச்சர், இந்த ஆண்டும் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். அனைத்து துறை சார்ந்த நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை பெற்று நிதிநிலை அறிக்கை தயார் செய்து வருவதாகவும் கூறினார். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகக் கூறிய முதலமைச்சர், மீதமுள்ள15 சதவிகித வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும், ஐந்து ஆண்டுகள் காத்திருக்க தேவையில்லை என்றும் கூறினார்.

தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்கள் முடியாத சூழலில் இருந்தால், அதை நேரில் தெரிந்து கொள்ளவே முதலமைச்சரின் கள ஆய்வு திட்டம் தொடங்கப்பட்டதாக ஸ்டாலின் தெரிவித்தார். திருமண நிகழ்வை தொடர்ந்து மன்னார்குடியில் 26 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

மேலும் டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு வாரத்திற்குள் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.