சென்னை அருகே வீடு புகுந்து ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி அடுத்த பொத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான யோகேஸ்வரன் (32) பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், யோகேஸ்வரன் வேலை முடிந்து வீட்டில் உறங்கி கொண்டிருந்துள்ளார்.
அப்போது ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் யோகேஸ்வரன் வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டியது. கழுத்து முகம், தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டப்பட்ட நிலையில் யோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ரவுடியை கொலை செய்துவிட்டு அந்த மர்ம கும்பல் தப்பிச் சென்றது. தகவல் அறிந்து வந்த போலீஸார், யோகேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் முன்விரோத காரணமாக கொலை சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து, ரவுடியை வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
newstm.in