கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு அரசு சார்பில் விழா: முதல்வர் அறிவிப்பு..!!

முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் பேசியதாவது., “மத்திய அரசு உதவியோடும் உறுதுணையோடும் அதிக நிதி பெற்று சிறந்த முறையில் செலவிட்டு புதுச்சேரியை முன்னேற்றுவோம். பட்ஜெட் கூட்டத்தொடரில் எம்எல்ஏக்கள் கேள்விகளுக்கு நிறைவான பதில்களை அமைச்சர்கள் தந்துள்ளனர்.

புதிய சட்டப்பேரவைக்கு வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. எங்கு என்பது விரைவில் முடிவு எடுக்கப்படும். இந்த ஆண்டுக்குள் புதிய சட்டப்பேரவை கட்ட முடிவு எடுக்கப்பட்டு பூமி பூஜை போடப்படும். அரசானது காலி பணியிடங்களை நிரப்புவதே எண்ணம்.

பத்தாயிரம் பணியிடங்கள் காலியாக இருந்தது. ஒவ்வொரு துறைவாரியாக நிரப்புகிறோம். விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். கடந்த ஆட்சி காலத்தில் பணியில் அமர்த்தப்பட்டு, அரசு சம்பளம் வாங்கி கடந்த ஆட்சியில் நீக்கப்பட்டிருந்தால் திரும்பவும் வேலை தர வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. ஆட்சி மாறலாம் பணி மாறாது.

பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரமாகும். மனைப் பட்டா தர நடவடிக்கை எடுப்போம். மறைந்த தலைவர்களுக்கும், நம் நாட்டுக்கு, மொழிக்கு, பாடுபட்டோருக்கு சிலை வைக்க அரசு விழா எடுக்க உள்ளோம். அதன்படி, மறைந்த பிரதமர் வாஜ்பாய், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, புதுச்சேரியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட செல்லா நாயக்கர், தியாகு முதலியார் ஆகியோருக்கு அரசு விழா எடுக்கப்படும். துறை சார்ந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும். எல்டிசி, யூடிசி தேர்வு ஏப்ரலில் நடத்தப்படும். அரசு ஊழியர்கள், செயலர்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் செயல்படுத்த முடியும்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.