2-வது முறையாக சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி..!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று மருத்துவத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் மீது அந்தத் துறையின் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசும் போது ஒரு தகவலைத் தெரிவித்தார்.

அதாவது, “கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பின்படி இதற்கான மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.அந்த மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு கவர்னருக்கு மசோதா அனுப்பப்பட்டது.

இந்நிலையில், 2-வது முறையாக அனுப்பப்பட்ட மசோதாவிற்கும் சில விளக்கம் கேட்டு தமிழக கவர்னர் திருப்பி அனுப்பியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் நேற்று தெரிவித்தார். மேலும், உரிய விளக்கத்துடன் மசோதா மீண்டும் கவர்னருக்கு அனுப்பபடும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.