இன்று மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம்!!

வேலை தேடும் இளைஞர்களுக்கான இன்று சென்னையில் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்களிலும் 2ஆவது அல்லது 3ஆவது வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

அந்த வகையில், இன்று சென்னையில் அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன.

கிண்டியில், ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை முகாம் நடைபெற உள்ளது.

8-ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.

இம்முகாமில், 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் www.tnprivatejobs.tn.gov.in பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.