முதியவர்களுடன் காதலியை உல்லாசத்திற்கு அனுப்பி அதை ஆபாச தளத்தில் பதிவேற்றிய காதலன்..!!

அசாமின் தேவி சரண் கல்லூரியை சேர்ந்த தர்சனா பராலி என்ற மாணவியும், சந்திர கமல் பெஜ்பருவா வர்த்தக கல்லூரியில் படித்து வரும் அபிசேக் காஷ்யப் இருவரும் உறவில் இருந்து வந்து உள்ளனர்.

இவர்களின் வேலை என்னவென்றால் முதியவர்களாக பார்த்து காதலி தர்சனாவை உல்லாசத்திற்கு அனுப்பி அதனை வீடியோ எடுப்பதும், பின்னர் அதனை சர்வதேச ஆபாச தளங்களில் காஷ்யப் பதிவேற்றுவதும் வழக்கம்.

இந்நிலையில் அசாமின் ஜோர்ஹத் பகுதியை சேர்ந்தவர் தீபன் கலிதா (வயது 65). இவர் தர்சனா பராலியுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு உள்ளார்.அவரது இந்த வீடியோ பல்வேறு ஆபாச தளங்களில் வந்து உள்ளது.

ஆபாச வலைத்தளங்களில் வீடியோவை பார்த்த அவரது வீட்டுக்கு பக்கத்தில் வசிப்பவர்கள் பலர் அதில், இவரது வீடியோவை பார்த்து அதிர்ந்து உள்ளனர். இதன்பின், நேராக தீபனின் குடும்பத்தினரிடம் சென்று அந்த வீடியோவை அவர்கள் காட்டி உள்ளனர்.

அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், அந்த கல்லூரி மாணவி மீது போலீசில் புகார் அளித்து உள்ளனர். ஆபாச தளத்தில் வீடியோ பரவல், விவகாரம் போலீஸ் வரை சென்றது என விரக்தியில் இருந்த முதியவர் தற்கொலை செய்து உள்ளார்.

போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் இருவரும், இதுபோன்ற வீடியோக்களை எடுப்பதும், பின்னர் அதனை சர்வதேச ஆபாச தளங்களில் காஷ்யப் பதிவேற்றுவதும் வழக்கம். இந்த வழக்கில் காஷ்யப்புக்கு தெரிந்த யாரோ சிலர் வீடியோவை ஆபாச தளத்தில் பதிவேற்றி உள்ளனர்.இந்த வழக்கில் கல்லூரி மாணவர்கள் மற்றும் கிஷாலே சர்மா என்று 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில், காஷ்யப்பின் லேப்டாப்பில் பல்வேறு ஆண்களுடன் தர்சனா உல்லாசத்தில் ஈடுபடும் வீடியோக்கள் உள்ளன. அவர்கள் இந்த வீடியோக்களை பயன்படுத்தி பணம் சம்பாதித்து இருக்க கூடும். அதனால், அவர்களின் வங்கி கணக்கு விவரங்களை விசாரிக்க இருக்கிறோம் என காவல் அதிகாரி கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.