தமிழக அரசு பள்ளிகளுக்கு மத்திய அரசு கொடுத்த நிதி… கிளாஸ் ரூம் கட்ட சூப்பர் ஏற்பாடு!

மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு பள்ளிகள் பல மோசமான நிலையில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இதில் தமிழகமும் அடங்கும். இவற்றை மறுசீரமைக்க வேண்டியது மாநில அரசின் கடமை. அதேசமயம் மத்திய அரசும் போதிய நிதி அளித்து கைகொடுக்க வேண்டியது அவசியமாகிறது.

எம்.பி கேள்வி

இதுதொடர்பாக மாநிலங்களவையில் திமுக எம்.பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது. அதில், கடந்த 2018-19ஆம் ஆண்டு முதல் சமக்ர ஷிக்‌ஷா என்ற திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உரிய ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

நிதி ஒதுக்கீடு விவரம்

அதில் வகுப்பறைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் பட்ஜெட் மூலம் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவை திட்ட ஒப்புதல் ஆணையத்தால் (PAB) ஒப்புதல் அளிக்கப்பட்டு விடுவிக்கப்படுகின்றன.

Elementary Schools

தொடக்கப் பள்ளிகளுக்கு நிதி

அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தருவது அரசின் கடமையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 2023-24ஆம் நிதியாண்டில் தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட நிதி குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

வகுப்பறை மேம்பாட்டிற்கு ஒதுக்கீடு

அதன்படி, 18.19 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 150.05 கோடி ரூபாய் நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.

Elementary Schools

உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்

மேலும் ஆந்திரப் பிரதேசம் 110.92 கோடி, அசாம் 70.38 கோடி, பஞ்சாப் 46.03 கோடி, ஜம்மு காஷ்மீர் 45.43 கோடி என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 67.05 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க ஒப்புதல் அளித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற மாநில விவரங்கள்

இந்த பட்டியலில் அதிகபட்சமாக அசாம் மாநிலத்திற்கு 173.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிகார் 143.90 கோடி, மத்தியப் பிரதேசம் 99.75 கோடி, ஹரியானா 64.55 கோடி, மேற்கு வங்கம் 59.03 கோடி என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.