ஆனந்த விகடன் யூட்யூப் தளத்தில் ‘கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா’ நிகழ்ச்சிக்கு நடிகை மற்றும் அரசியல் தலைவரான குஷ்பு பேட்டியளித்திருக்கிறார். அரசியல், சினிமா எனப் பல விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார்.
உங்களைத் தமிழ்நாட்டுப் பெண்ணா மாற்றின விஷயம் எது ?
எனக்கு ஆரம்பத்துல தெலுங்கு சினிமாவுக்கு போகுறதுக்கும், இந்தி சினிமாவுக்கு போகுறதுக்கும் வாய்ப்புகள் இருந்துச்சு. ஆனால், தமிழ்நாடு ஒரு வீடு மாதிரி பீல் பண்ண வச்சது. சென்னைல இருக்கும் போது மனநிம்மதியா இருந்துச்சு. சென்னையை விட்டுட்டு போறதுக்கே மனசு வரல. கடவுள் புண்ணியத்துல எனக்கு இங்கேயே மாப்ள கிடைச்சுட்டாரு. எந்தவொரு காரணத்துக்கும் சென்னையை விட்டுட்டு போறதுக்கு வாய்ப்பே இல்ல. தமிழ் எனக்கு சிந்தனை மொழியா மாறிடுச்சு. டெல்லிக்கு போய் இந்தி பேசிட்டிருப்பேன். ஆனால், திடீர்னு தமிழ் வந்துடும். நான் 100 சதவிகிதம் தமிழச்சி. என் குழந்தைகளும் அதே மாதிரி தான் சொல்லுவாங்க.
பலர் திருமணத்துக்குப் பிறகு நடிப்புல இருந்து விலகிடுவாங்க, நீங்க அதுக்கு அப்புறம் சீரியல்கள்ல நடிச்சீங்க. அந்தப் பயணம் பத்தி சொல்லுங்க ?

மூத்த மகள் பிறந்து முதல் 4 மாசத்துக்கு எந்த ஷூட்டிங்கும் போகல. குழந்தைகளோட எல்லா வேலையும் நான்தான் பார்த்துக்கணும். அவுங்களுக்கு ஒரு ‘நேனி’ வச்சது கிடையாது. என் அம்மா, அத்தை என் கூடையே இருந்தாங்க. சினிமாவுல இருந்து சீரியலுக்கு போகும் போது சென்னைய விட்டு வெளிய போகுற கட்டயாம் இருக்காது. கல்யாணத்துக்கு பிறகு ஞாயிற்றுகிழமைகள்ல ஷுட்டிங் போக மாட்டேன். ஞாயிற்றுகிழமைகள்ல குடும்பத்தோட நேரத்த செலவு பண்ணனும்னு விரும்புவேன். 6 மணி வரைக்கும்தான் செட்ல இருப்பேன். சினிமால இது சாத்தியம் கிடையாது. பலரோட கால்ஷீட் இருக்கு. இரவு நேர ஷூட்டிங் இருக்கும். சீரியல்கள்ல 99 % என்னுடைய தயாரிப்புல தான் பண்ணிருக்கேன். காலைல 10 மணிக்கு போவேன். மாலைல 6 மணிக்குள்ள வீட்டுக்கு வந்துருவேன். எனக்கு டெலிவிஷன் இதுனால வசதியா இருந்துச்சு. குழந்தைகள் ஸ்கூலுக்குப் போகும்போது, அவங்கள ஸ்கூல்ல விட்டுட்டு ஷுட்டிங் போவேன். ஸ்கூல் முடிஞ்சதும் மதியம் குழந்தைகள அம்மா கூட்டிட்டு செட்க்கு வந்துருவாங்க. அங்கேயே அவங்கள ஹோம்வொர்க் பண்ண வச்சுருவேன். பிறகு, கொஞ்ச நேரம் தூங்கிட்டு மாலை நேரத்துல எல்லாரும் கிளம்பி வீட்டுக்கு வந்துருவோம்.
2005-ல ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அது ரொம்ப பிரச்னையாச்சு. அதுக்கு ஒரு கட்சியினர் என் வீட்டு முன்னாடி தர்ணா போராட்டம் பண்ணிட்டு இருந்தாங்க. அது ரொம்ப நாளா தொடர்ந்துட்டே இருந்துச்சு. இந்த பிரச்னையோட கேஸ் சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போச்சு. 5 வருஷம் கேஸ் நடந்தது. என் கணவர் கிட்ட அரசியல் போகுறத பத்தி முடிவுகள் கேட்டேன். ‘இப்போ வேண்டாம், இப்ப நீ கட்சில சேர்ந்தா , அதை வச்சு தான் இந்த கேஸ ஜெயிச்சுட்டன்னு சொல்லுவாங்க. இந்த கேஸ முடிச்சுட்டு போ’னு சொன்னாங்க. என் கணவர் சொன்னதுதான் சரின்னு எனக்கு தோனுச்சு. 2010 ஏப்ரல் மாசத்துல கேஸ்ல ஜெயிச்சுட்டேன்.

அதுக்கு அப்புறம்தான் தி.மு.க ல சேர்ந்தேன். அந்த சமயத்துல ஜெயா டி.வி ல ‘ஜாக்பாட்’னு ஒரு நிகழ்ச்சி பண்ணிட்டு இருந்தேன். எல்லாரும் ‘அங்க தான் போவன்னு பார்த்தோம், தி.மு.க ல வந்து சேர்ந்துட்ட’னு கேட்டாங்க. நான் வரும் போது புரட்சி தலைவர் இல்ல. அம்மையார் ஜெயலலிதா மேல எனக்கு கெட்ட அபிப்ராயம்னுலாம் கிடையாது. கலைஞர் மேல எனக்கு அதிகப்படியான அபிப்ராயம் இருந்துச்சு. இப்ப வரைக்கும் இருக்கு.
நீங்க கட்சில சேர்ந்தது கொள்கைக்காகவா?, வாய்ப்புக்காகவா ?

வாய்ப்பு கிடைச்சுருந்தா அப்பவே கலைஞர் கிட்ட பேசி வாய்ப்பு தேடி போயிருப்பேனே. ஆட்சில இருந்தப்பவே வாய்ப்பு கேட்டிருப்பேனே. நான் வாய்ப்பு தேடல. ஒரு கட்சிக்கு நம்மளால என்ன வளர்ச்சி கொண்டு வர முடியும். அந்த கட்சியோட கொள்கைக்கு நம்மளால என்ன பண்ன முடியும்னு யோசிச்சேன். அதை தான் எல்லா கட்சிலையும் பண்ணேன். அரசியல் ரீதியா மக்கள திசைத் திருப்பறதவிட மக்கள்கிட்டேயே ஓட்டு போடுற முறைய கொடுத்தால் அவுங்க சரியா வாக்களிப்பாங்க.