Man arrested for trying to correct date of birth in Modi, Yogi Adityanath Aadhaar card | மோடி, யோகி ஆதித்யநாத் ஆதார் கார்டில் பிறந்த தேதியை திருத்த முயன்றவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

முசாபர்பூர்: பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் ஆதார் கார்டில் பிறந்த தேதியை மாற்ற முயன்றதாக பீஹார் இளைஞரை குஜராத் போலீசார் கைது செய்தனர்.

பீஹார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் சதாத்பூரைச் சேர்ந்த மதன்குமார் என்ற இளைஞரை குஜராத் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

latest tamil news

இது குறித்து முசாபர்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராகேஷ் குமார் கூறியது, கைது செய்யப்பட்ட மதன்குமார் என்பவர், பிரதமர் மோடி, உபி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் ஆதார் எண்ணை வைத்து இணையதளம் வாயிலாக ஐ.பி. முகவரியை பயன்படுத்தி ஆன்லைன் வாயிலாக இருவரின் பிறந்த தேதியை திருத்த முயற்சித்துள்ளார். இதனை குஜராத் சைபர் கிரைம் போலீசார் இங்குள்ள உள்ளூர் போலீஸ் உதவியுடன் குற்றவாளியின் இருப்பிடத்தை கண்டறிந்து, கைது செய்துள்ளனர் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.