Jailer: ஜெயிலர் படத்தால் ஏகப்பட்ட கடன்..ரஜினி நல்ல மனிதர்..என் கஷ்டத்தை புரிந்துகொள்வார்..உருக்கமாக பேசிய இயக்குனர்..!

திரையுலகில் இதுவரை ஒரே தலைப்புகளில் பல படங்கள் வந்துள்ளது. ஆனால் ஒரே நேரத்தில் ஒரே தலைப்புடன் இரு படங்கள் வெளியாக இருப்பது இதுதான் முதல் முறையாக இருக்கும் என்றே தெரிகின்றது. தமிழில் ரஜினி நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படமும் மலையாளத்தில் சக்கீர் மடத்தில் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படமும் ஒரே தினத்தில் வெளியாகின்றன.

இந்த விவகாரம் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. சூப்பர்ஸ்டார் ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் தமன்னா, மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர்.

டைட்டில் விவகாரம்

இதன் காரணமாக இப்படம் ஒரு பான் இந்திய படமாக வெளியாக இருக்கின்றது. இந்நிலையில் ஜெயிலர் படத்தில் இருந்து வெளியான பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது. எனவே இப்படம் கண்டிப்பாக வெற்றிபெற்று ரஜினியை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Jujubee: ஜெயிலர் திரைப்படம் எப்படி இருக்கு ? சென்சார் குழு சொன்ன விமர்சனம்..!

இதைத்தொடர்ந்து ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையில் வெளியாகின்றது. எனவே இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு தற்போதே துவங்கியுள்ளது. அதன்படி ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28 ஆம் தேதி சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற இருக்கின்றது.

இந்நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படம் டைட்டில் விவகாரத்தில் சிக்கியுள்ளது. அதாவது ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் அதே தினத்தில் மலையாளத்தில் ஜெயிலர் என்றே பெயரில் ஒரு திரைப்படம் வெளியாகின்றது. இப்படத்தை இயக்குனர் சக்கீர் மடத்தில் இயக்கியுள்ளார்.

உருக்கமாக பேசிய இயக்குனர்

எனவே ஒரே தினத்தில் ஒரே டைட்டிலில் இரு படங்கள் வெளியானால் தன் படத்தின் வசூல் பாதிக்கும் என்பதற்காக சக்கீர், மலையாளத்தில் வெளியாகும் ரஜினியின் ஜெயிலர் படத்தின் டைட்டிலை மாற்றக்கோரி படக்குழுவை அணுகினார். ஆனால் படக்குழு டைட்டிலை மாற்றுவதாக இல்லை.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சக்கீர் மடத்தில், ஜெயிலர் படத்தால் நான் கடனாளி ஆகிவிட்டேன். என் வீடு, குழந்தையின் நகை, கார் என அனைத்தையும் விற்று ஜெயிலர் திரைப்படத்தை எடுத்துள்ளேன். இப்படத்தை நம்பித்தான் என் வாழ்க்கையே இருக்கின்றது. எனவே ரஜினி நல்ல மனிதர், இதை அவர் புரிந்துகொள்வார் என நான் நம்புகின்றேன் என இயக்குனர் சக்கீர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.