Kanguva: `ஒருநூறு புலிநகமும் மாரறைய' `கங்குவா' முழுப் பாடல் வரிகள் இவைதான்!

நடிகர் சூர்யாவின் 42 ஆவது திரைப்படமான ‘கங்குவா’ படத்தின் GLIMPSE வீடியோ இரண்டு நாட்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி மூன்று கோடி பார்வையாளர்களைக் கடந்து வைரலாகி வருகிறது.

இப்படம் சூர்யாவின் மற்ற படங்களைவிட அதிக பட்ஜெட்டில் 3டி தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாக பத்து மொழிகளில் தயாராகி வருகிறது. இதன் பீரியட் போர்ஷன் காட்சிகள் முழுவதையும் கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப் பகுதியில் எடுத்து வருகின்றனர். சூர்யாவின் வித்தியாசமானத் தோற்றத்திற்கான மேக்கப் போடுவதற்கு மட்டுமே தினமும் இரண்டரை மணி நேரம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சூர்யாவின் பிறந்த நாளுக்கு வெளியான சிறப்பு டீசரில் ‘கங்கா கங்கா கங்குவா’ பாடலின் சில வரிகள் இடம்பெற்றிருந்தது. இதன் பாடல் வரிகளை வெளியிட்டுள்ளார் இத்திரைப்படத்தின் வசனகர்த்தா மற்றும் பாடலாசிரியரான மதன் கார்க்கி.

கங்குவா: மத ன் கார்க்கி

‘ஆழிக்குள் கொடி நட்ட மாறாக்கன் வழிவந்து

வேழத்த விழவெச்ச கொச்சாமி வழிவந்து

பஞ்சத்தச் செயிச்செடுத்த இளம்பன் வழி வந்த

பெருமலையப் பேத்த தங்கையனுந்த பேரன்

சச்சாங்கனச் சாச்ச செந்தீயினுந்த மவன்

மண்டயாத்து மலயேறி கொண்டலப் புடிக்கவும்

வெங்காட்டு மரமேறி வெண்வேங்க அடிக்கவும்

அரத்தித் தீவேறி அச்சத்தக் காட்டவும்

முக்காட்டுக் களிறேரி திக்கெல்லாம் ஓட்டவும்

ஒண்டையே ஒண்ட வீரந்தைன்

எங்க கங்கா

ஒருநூறு புலிநகமும் மாரறைய

சருகூரும் உரகங்க நின்னுறைய

கரையூரும் திரையெல்லாம் முகம் வரைய

பெருமாச்சிப் பறையெல்லாம் பேர் பறைய

ஒண்டையே ஒண்ட வீரந்தைன்

சண்டையே ஏங்கஞ் சூரந்தைன்

தீ அவ பெத்தத் தீரந்தைன்

எங்க பெருமாச்சிக்காரந்தைன்

கங்கா கங்கா கங்குவா’

இதை சூர்யா ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.