சிகர்: குறைந்த விலையில் உரம் கிடைக்கும் நாடு இந்தியா என ராஜஸ்தானில் நடந்த ஒரு விழாவில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.
அரசு விழாவில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி மேலும் பேசியதாவது: விவசாயிகளின் கடின உழைப்பால், அவர்களின் சக்தியால் மண்ணில் இருந்து நாம் தங்கத்திற்கு இணையான பயன் பெறுகிறோம்.
இதன் காரணமாகத்தான் விவசாயிகளுடன் நமது அரசு தோளோடு, தோளாக நிற்கிறது. பல ஆண்டுகளாக விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டிருந்தனர்.
எனது தலைமையிலான அரசு விவசாயிகளின் வலியையும், கவலையையும் உணர்ந்துள்ளது. இதனால் தான் கடந்த 9 ஆண்டுகளாக விவசாயிகள் பலன் பெறும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். விவசாயிகளுக்கென 1.25 லட்சம் வளர்ச்சி மையங்கள் உருவாக்கியுள்ளோம்.
இந்தியாவில் விவசாயிகள் நலன் பெறும் வகையில பிரதமர் கிசான் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை விவசாயிகள் பலர் பயன் பெறுகின்றனர். உலகிலேயே குறைவான விலையில் யூரியா உரம் விவசாயிகளுக்கு கிடைக்கிறது. 300 ரூபாயில் யூரியா உரம் வாங்க முடிகிறது. பிற நாடுகளில் இது சாத்தியம் இல்லை.
இந்தியாவை இழிவுபடுத்துவதா ?
தொடர்ந்து நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அங்கு அவர் பேசியதாவது;
ராஜஸ்தானில் வளர்ச்சியை காங்கிரஸ் முடக்கி வருகிறது. மத்திய அரசு நிதியில் இருந்து 1.5 லட்சம் கோடி வழங்கி இருக்கிறோம். காங்கிரஸ் ஆட்சியில் 50 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கப்பட்டது. ஊழல் குறித்த சமீபத்திய ரெட் டைரி விவகாரத்தில் காங்கிரஸ் மவுனம் காக்கிறது. இங்கு இளைஞர்களின் எதிர்காலம் வீணடிக்கப்படுகிறது. ராஜஸ்தானில் விரைவில் மாற்றம் வரும். இங்கு தாமரை மலரும். ஊழலையும் , கடந்த கால பாவங்களையும் மறைக்கவே இந்தியா என்ற கூட்டணி பெயர் வைத்துள்ளனர். கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்து இழிவுபடுத்துகின்றனர்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement