புனே: புனேயில், கணவன் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத காரணத்தினால், மனைவியை பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், கடந்த பிப்., மாதம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் 47 வயதான நபரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கடன் வாங்கி உள்ளார். எவ்வளவு வாங்கி உள்ளார் என்ற விபரம் வெளியாகவில்லை. ஆனால், அவர் கடனை திருப்பி செலுத்தவில்லை.
இதனையடுத்து அவரின் வீட்டிற்கு சென்ற கடன் கொடுத்த நபர், கத்தி முனையில் மிரட்டல் விடுத்ததுடன், கணவன் கண்முன்னே மனைவியை பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அதனை மொபைல் போனில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement