மேற்கு வங்காள சட்டசபையில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தீர்மானம் – பா.ஜனதா வெளிநடப்பு

கொல்கத்தா, மணிப்பூரில் தொடரும் கலவரம் அனைத்து தரப்பினரையும் கவலை அடைய வைத்துள்ளது. இந்த வன்முறை சம்பவங்களை கண்டித்து மேற்கு வங்காள சட்டசபையில் நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டசபை விவகாரத்துறை மந்திரி சொவந்தேப் சட்டோபாத்யாய் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது பேசிய முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, கலவரத்தை அடக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்தார். அவர் கூறும்போது, ‘மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அறிக்கை வெளியிட வேண்டும். வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமருக்கு மணிப்பூர் செல்ல … Read more

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: தென்கொரியா, ஜப்பான் அணிகள் சென்னையில் தீவிர பயிற்சி

சென்னை, சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி ஆக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 3-ந் தேதி முதல் 12-ந் தேதி நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, சீனா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு … Read more

துருக்கியில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி – 23 பேர் காயம்

அங்காரா, துருக்கியில் கிழக்கு கார்ஸ் மாகாணத்தின் எர்சுரம்-கார்ஸ் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அங்குள்ள காராகுட் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த 50 மீட்டர் ஆழ பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இதனையடுத்து தகவலின்பேரில் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் 7 … Read more

“திமுக யாத்திரை நடத்தினால், `எம் மகன், என் பேரன்’ என்று பெயர் வைப்பார்கள்!” – அண்ணாமலை

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை பயணத்தில் சிவகங்கை வந்தார். அம்பேத்கர் சிலையில் இருந்து நடைப்பயணத்தை தொடங்கிய அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தொண்டர்களுடன் அங்கிருந்து மதுரை ரோடு, நெல்லுமண்டி தெரு, கோட்டை முனியாண்டி கோவில் தெரு, வாரச்சந்தை ரோடு வழியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர். நடைபயணத்தின் போது ஆங்காங்கே கூடியிருந்த பொதுமக்கள் பலரும் அண்ணாமலையை சந்தித்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட திறந்தவெளி வாகனத்தில் இருந்து பேசும்போது, … Read more

விதியில் திருத்தம் செய்ய உள்ளதால் ஸ்மார்ட் மீட்டருக்கான டெண்டர் ரத்து: மின் வாரியம் அறிவிப்பு

சென்னை: நிறுவனங்கள் தரப்பில் எழுப்பிய சந்தேகங்களுக்கு ஏற்ற வகையில் டெண்டர் விதியில் திருத்தம் செய்யப்பட உள்ளதால், வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டரை மின்வாரியம் ரத்து செய்துள்ளது. வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கிடுவதில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்துமாறு அனைத்து மாநில மின்வாரியங்களுக்கும் மத்திய அரசு ஏற்கெனவே அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, வீடுகளுக்கு ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தும் பணியை தமிழ்நாடு மின்வாரியம் மேற்கொண்டது. இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்கான டெண்டர் செயல்முறை … Read more

மும்பை ரயிலில் மனநலம் பாதிக்கப்பட்ட ஆர்பிஎஃப் காவலர் தாக்குதல் – எஸ்.ஐ. உட்பட 4 பேர் சுட்டுக் கொலை

மும்பை: ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படையை (ஆர்பிஎஃப்) சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட காவலர் ஒருவர் தனது உயரதிகாரி உட்பட 4 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்ப முயன்ற காவலரை போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு படை (மேற்கு ரயில்வே) ஐ.ஜி. பிரவீன் சின்ஹா கூறியதாவது. ஜெய்ப்பூர் – மும்பை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (12956) … Read more

Request to dismiss Rahuls plea | ராகுல் மனுவை தள்ளுபடி செய்ய கோரிக்கை

புதுடில்லி, மோடி சமூகத்தினரை அவதுாறாக பேசிய வழக்கில், காங்., முன்னாள் தலைவர் ராகுல் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யும்படி, குஜராத் முன்னாள் அமைச்சர்பர்னேஷ் மோடி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு உள்ளார். கடந்த லோக்சபா தேர்தலின் போது, கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்த காங்., முன்னாள் தலைவர் ராகுல், குஜராத்தில் அதிகமாக வசிக்கும் மோடி சமூகத்தினர்குறித்து அவதுாறாக பேசினார். இது தொடர்பான வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. … Read more

இனி சுறா மாதிரியான படங்களில் நடிக்க மாட்டேன் : தமன்னா

நடிகை தமன்னா 'கேடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தமிழ் சினிமாவை கடந்து தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தமிழில் 'ஜெயிலர்' படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார். இதன் புரொமோஷனுகாக யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் தமன்னா. அதில் “நான் நடித்ததில் சுமாரான படமென்றால் நிறைய படம் இருக்கு. சுறா படம் எனக்கு பிடிக்கும். இருந்தாலும் அந்த படம் தான் நான் நடித்ததில் மோசமான படம் என நினைக்கிறேன். … Read more

Meaningful devolution is needed, insists Tamil National Federation | அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு தேவை; தமிழர் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தல்

கொழும்பு : ‘-சர்ச்சைக்குரிய 13வது சட்ட திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதன் வாயிலாக, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை இலங்கை தமிழர்களுக்கு வழங்க வேண்டும்’ என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில் வசித்து வரும் தமிழர்கள், தங்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் என நீண்டகாலமாக கோரி வருகின்றனர். கடந்த 1987ல் இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இலங்கை அரசியல் சட்டத்தில் இதற்கான ’13 ஏ’ சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. தமிழர்களின் … Read more