வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பார்லிமென்டில் அத்துமீறி நுழைந்து புகை குண்டுகளை வீசிய விவகாரத்தில் கைதான 4 பேரின் காவலை 7 நாள் நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது லோக்சபாவில் பார்வையாளர்கள் மாடத்திலிருந்து குதித்த மனோரஞ்சன், சாகர் சர்மா ஆகிய இருவரும், லோக்சபாவிற்குள் மஞ்சள்நிற புகை குண்டுகளை வீசினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவையில் இருந்த எம்.பி.க்கள் அச்சத்தில் வெளியேறினர்.
நாடு முழுதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தில் மனோரஞ்சன், சாகர் சர்மா, நீலம் ஆசாத், அமோல் ஷிண்டே ஆகிய நான்குபேரை டில்லி போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இன்று டில்லி பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 7 நாள் கோர்ட் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement