Meteorological Center warns of dense fog for five days | ஐந்து நாட்களுக்கு அடர்த்தியான மூடுபனி வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

புதுடில்லி:’தலைநகர் டில்லியில் அடுத்த ஐந்து நாட்களுக்கு அடர்த்தியான கடும் மூடுபனி நிலவும்’ என, எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், குறைந்தபட்ச வெப்பநிலை ஏழு முதல் எட்டு டிகிரி செல்ஷியஸ் இருக்கும் எனவும் கணித்துள்ளது.

டில்லியில் வெப்பநிலை நேற்று 8.4 டிகிரி செல்ஷியஸாகப் பதிவாகி இருந்தது.

டில்லி மற்றும் அண்டை மாநிலமான ஹரியானா மற்றும் சண்டிகரில் அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகாலையில் அடர்த்தியான கடும் மூடுபனி நிலவும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

வாகன ஓட்டிகள் முகப்பு பயன்படுத்த வேண்டும். அதேபோல விமான நிறுவனங்கள் மற்றும் ரயில்வே துறை பனிமூட்டத்துக்கு ஏற்றவாறு பயண அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும். நேற்று காலை 8:30 மணிக்கு 95 சதவீதம இருந்த காற்றின் ஈரப்பதம் மாலை 5:30 மணிக்கு 82 சதவீதமாக இருந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

காற்றின் தரக்குறியீடு காலை 9:00 மணிக்கு 377 ஆகவும், மாலையில் 358ஆகவும் பதிவாகி இருந்தது. இது, மிகவும் மோசமான நிலை என, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

அண்டை மாநிலங்களாக உத்தர பிரதேசத்தின் வடக்கு பகுதிகளிலும், ஹரியானா, சண்டிகர் மற்றும் ராஜஸ்தான் தெற்குப் பகுதிகள் மற்றும் பஞ்சாபில் நேற்று காலை அடர்த்தியான பனி மூட்டம் நிலவியது.

டில்லி, ஹரியானா, பஞ்சாபின் பாட்டியாலா, அம்பாலா, சண்டிகர், உ.பி.,யின் பரேலி, லக்னோ, வாரணாசி ஆகிய இடங்களில் நேற்று 30 மீட்டருக்கும் குறைவான பார்வைத் பதிவாகி இருந்தது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நேற்று காலை அடர்த்தியான பனிமூட்டம் நிலவியது. இருப்பினும் சில இடங்களில் வெப்பநிலை சராசரி நிலையில் பதிவாகி இருந்தது.

பஞ்சாபின் லுாதியானாவில் 10.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 5 டிகிரி அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அமிர்தசரஸ் – 8.9, பதிண்டா மற்றும் பதான்கோட் – 9, பரித்கோட் – 9.5, குர்தாஸ்பூர் – 6.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.

இரு மாநிலங்களின் பொதுத் தலைநகரான சண்டிகரில் இயல்பை விட இரண்டு டிகிரிகள் அதிகமாக 8.8 டிகிரி செல்ஷியஸ் இருந்தது.

ஹரியானாவின் அம்பாலா – 9.4, ஹிசார் – 9.1, கர்னால் – 9.4, ரோஹ்தக் – 10.2, சிர்சா – 11, பிவானி – 7.1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை நிலவியது.

8 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தின் பூர்வா பகுதியைச் சேர்ந்த கோவிந்த் பதக், 31 மற்றும் விவேகானந்த், 21 ஆகிய இருவரும் நேற்று முன் தினம் இரவு பைக்கில் சென்றனர்.

அப்போது கடும் பனிமூட்டம் நிலவியதால் சாலையில் வரும் வாகனங்கள் தெரியவில்லை. எதிரில் வந்த லாரி மீது பைக் மோதியதில் அதே இடத்தில் பதக் உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விவேகானந்த் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

அதேபோல, பூர்வா போலீஸ் ஸ்டேஷன் கான்ஸ்டபிள் தினேஷ் யாதவ், நேற்று அதிகாலை ஜீப் ஓட்டிச் சென்றார். எதிரில் வந்த லாரி மீது ஜீப் மோதி தினேஷ் பலத்த காயம் அடைந்தார்.

பரேலி மாவட்டம் கபிகஞ்ச் பகுதியில் நேற்று முன் தினம் காலை, இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் பைக்கில் சென்றனர். பின்னால் வந்த டிராக்டர் மோதி பைக்கில் சென்ற சுனிதா தேவி, 35, பிரபாதேவி, 36, ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த ராஜ்யபால் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

அதேபோல, ஆக்ரா – லக்னோ விரைவுச் சாலையில் கன்டெய்னர் லாரியின் பின்னால் பஸ் மோதியது. தொடர்ந்து அடுத்தடுத்து மேலும் இரு பஸ்கள் அந்த பஸ் மீது மோதின.

பின்னர் மேலும் இரு கார்கள் அந்த பஸ்கள் மீது மோதின. இந்த விபத்தில் விஜயகுமார், 50, என்பவர் உயிரிழந்தார். 15 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் 16 பேரும் பஸ்சில் பயணம் செய்தவர்கள். காயம் அடைந்த 15 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உ.பி.,யின் பாக்பாத் மாவட்டம் கிழக்கு பெரிபேரல் விரைவு சாலையில் பயணியரை ஏற்றி சென்ற வேனும் லாரியும் மோதியது. வேனில் சென்ற சீமா, 44, மன்தீப், 38, ஆகிய இரு பெண்கள் பலியாகினர். அதில், 11 பேர் காயம் அடைந்தனர்.

ஆக்ரா சதாரா பாலத்தின் மீது 12க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று நேற்று முன் தினம் அதிகாலை 3:00 மணிக்கு மோதின. ஒருவர் இறந்தார். மேலும் ஆறு பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல ஆக்ரா – கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜஸ்வந்த் நகர் பகுதியில் நேற்று முன் தினம் அதிகாலை, நின்றிருந்த மூவர் மீது லாரி மோதியது. இவர்களில் ஒருவர் நிலமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த விபத்துகளில் மொத்தம் ஆறு பேர் பலியாகினர். இவை அனைத்தும் பனிப்பொழிவு காரணமாக போதிய வெளிச்சம் இல்லாமல் நிகழ்ந்த விபத்துகள் என போலீசார் தெரிவித்தனர்.

பள்ளிக்கு விடுமுறை

புதுடில்லி அருகே அமைந்துள்ள உத்தர பிரதேசத்தின் கவுதம்புத்தா நகர் மாவட்ட கலெக்டர் மணீஷ் குமார் வர்மா பரிந்துரைப்படி, கல்வி அதிகாரி ராகுல் பன்வார் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவு:கடுங்குளிர் காரணமாக கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா முழுதும், 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.ஆனால், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் இந்த இருநாட்களும் பள்ளிக்கு வந்து தங்கள் பணிகளைச் செய்ய வேண்டும். மாநில அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்குக் இந்த உத்தரவு பொருந்தும். அதேபோல, மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ. சி.எஸ்.இ., ஆகிய பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இருவர் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தின் பூர்வா பகுதியைச் சேர்ந்த கோவிந்த் பதக், 31 மற்றும் விவேகானந்த், 21 ஆகிய இருவரும் நேற்று முன் தினம் இரவு பைக்கில் சென்றனர். அப்போது கடும் பனிமூட்டம் நிலவியதால் சாலையில் வரும் வாகனங்கள் தெரியவில்லை. எதிரில் வந்த லாரி மீது பைக் மோதியதில் அதே இடத்தில் பதக் உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விவேகானந்த் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.அதேபோல, பூர்வா போலீஸ் ஸ்டேஷன் கான்ஸ்டபிள் தினேஷ் யாதவ், நேற்று அதிகாலை ஜீப் ஓட்டிச் சென்றார். எதிரில் வந்த லாரி மீது ஜீப் மோதி தினேஷ் பலத்த காயம் அடைந்தார்.

8 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தின் பூர்வா பகுதியைச்
சேர்ந்த கோவிந்த் பதக், 31 மற்றும் விவேகானந்த், 21 ஆகிய இருவரும் நேற்று
முன் தினம் இரவு பைக்கில் சென்றனர். அப்போது கடும் பனிமூட்டம் நிலவியதால்
சாலையில் வரும் வாகனங்கள் தெரியவில்லை. எதிரில் வந்த லாரி மீது பைக்
மோதியதில் அதே இடத்தில் பதக் உயிரிழந்தார். பலத்த காயங்களுடன்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விவேகானந்த் சிகிச்சை பலனின்றி மரணம்
அடைந்தார்.

அதேபோல, பூர்வா போலீஸ் ஸ்டேஷன் கான்ஸ்டபிள் தினேஷ்
யாதவ், நேற்று அதிகாலை ஜீப் ஓட்டிச் சென்றார். எதிரில் வந்த லாரி மீது ஜீப்
மோதி தினேஷ் பலத்த காயம் அடைந்தார்.

பரேலி மாவட்டம் கபிகஞ்ச்
பகுதியில் நேற்று முன் தினம் காலை, இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் பைக்கில்
சென்றனர். பின்னால் வந்த டிராக்டர் மோதி பைக்கில் சென்ற சுனிதா தேவி,35,
பிரபாதேவி, 36, ஆகிய இருவரும் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ராஜ்யபால்
என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

அதேபோல, ஆக்ரா –
லக்னோ விரைவுச் சாலையில் கன்டெய்னர் லாரியின் பின்னால் பஸ் மோதியது.
தொடர்ந்து அடுத்தடுத்து மேலும் இரு பஸ்கள் அந்த பஸ் மீது மோதின. பின்னர்
மேலும் இரு கார்கள் அந்த பஸ்கள் மீது மோதின. இந்த விபத்தில் விஜயகுமார்,
50, என்பவர் உயிரிழந்தார். 15 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் 16 பேரும்
பஸ்சில் பயணம் செய்தவர்கள். காயம் அடைந்த 15 பேர் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டுள்ளனர்.

உ.பி.,யின் பாக்பாத் மாவட்டம் கிழக்கு
பெரிபேரல் விரைவு சாலையில் பயணியரை ஏற்றி சென்ற வேனும் லாரியும் மோதியது.
வேனில் சென்ற சீமா, 44, மன்தீப், 38 , ஆகிய இரு பெண்கள் பலியாகினர்.
அதில், 11 பேர் காயம் அடைந்தனர்.

ஆக்ரா சதாரா பாலத்தின் மீது
12க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று நேற்று முன் தினம் அதிகாலை
3:00 மணிக்கு மோதின. ஒருவர் இறந்தார். மேலும் ஆறு பேர் காயம் அடைந்து
சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல ஆக்ரா – கான்பூர் தேசிய
நெடுஞ்சாலையில் ஜஸ்வந்த் நகர் பகுதியில் நேற்று முன் தினம் அதிகாலை,
நின்றிருந்த மூவர் மீது லாரி மோதியது. இவர்களில் ஒருவர் நிலமை கவலைக்கிடமாக
உள்ளது. இந்த விபத்துக்களில் மொத்தம் ஆறு பேர் பலியாகினர். இவை அனைத்தும்
பனிப்பொழிவு காரணமாக போதிய வெளிச்சம் இல்லாமல் நிகழ்ந்த விபத்துகள் என
போலீசார் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.