சென்னை: தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் மீண்டும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டிசம்பர் 3வது வாரத்தில் பெய்த அதிகனமழை காரணமாக, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்கள் வரலாறு காணாத வெள்ளத்தில் மூழ்கின. 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நெல்லை […]
