பொங்கல் பண்டிகையை ஒட்டி ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து நேற்று இரவு முதலே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர். இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து நெடுஞ்சாலைகளும் போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது. அதேவேளையில் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பேருந்துகள், ரயில்கள் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் வெளியேறியதை அடுத்து சென்னை சாலைகள் போக்குவரத்து நெரிசல் இன்றி […]
