கிரிக்கெட்டுக்கு இது ஒரு சோகமான நாள்: அணில் கும்ப்ளே

பெங்களூரு,

18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் நீண்ட கால ஏக்கம் தீர்ந்துள்ளது.இதனை கொண்டாட பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டது.அதன்படி பெங்களூரு அணி வீரர்களுக்கு , கர்நாடக முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி, ஆகியோர் தலைமையில் பாராட்டு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சின்னசாமி மைதானத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற இருந்த நிலையில் , பெங்களூரு அணியை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இந்நிலையில் வீரர்கள் வரும்வரை பொறுமையாக இருக்காமல் ஸ்டேடியத்தின் சுவர்கள் மற்றும் வேலிகளில் ரசிகர்கள் ஏறிச் செல்ல தொடங்கினர்.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். 50 மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இந்திய முன்னாள் வீரர் அணில் கும்ப்ளே வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

கிரிக்கெட்டுக்கு இது ஒரு சோகமான நாள். இன்று ஆர்சிபியின் வெற்றியைக் கொண்டாடும் போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் இதயம் இரங்கல் தெரிவிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். துயரம்.என தெரிவித்துள்ளார் .

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.