Geetham Veg: சென்னை போரூரில் கீதம் வெஜ் புதிய உதயம்!

சென்னையின் பிரபல சைவ உணவக சங்கிலி, கீதம் வெஜ், தனது 14-வது கிளையை போரூரில் திறந்துள்ளது. பல்வேறு வகையான உணவுகளுக்காக பெயர் பெற்ற கீதம், சென்னையின் அனைத்து மூலைகளிலும் உண்மையான சுவைகளை கொண்டு செல்லும் தனது பயணத்தைத் தொடர்கிறது.

போரூர் ஏரிக்கு அருகிலுள்ள இந்த புதிய கிளை, கீதத்தின் சிறப்பான அனுபவங்களை வழங்குகிறது, ஆரோக்கியமான உணவுகள், விரைவான சேவை மற்றும் அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ற சூழ்நிலையை உருவாக்குகிறது.

கீதம் வெஜ்
கீதம் வெஜ்

கீதத்தின் நிறுவனர் திரு.முரளி, “நல்ல உணவு மக்களை ஒன்றிணைக்கிறது என்பதை நாங்கள் எப்போதும் நம்புகிறோம். போரூர் என்ற இடம் நீண்ட நாட்களாக எங்கள் கவனத்தில் இருந்தது; இது வளர்ந்து வரும் குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதியாக திகழ்கிறது. எங்கள் 14-வது கிளையை இங்கு தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

ஜூன் 9-ம் தேதி, கீதம் தனது புதிய கிளையை அதிகாரப்பூர்வமாகத் திறந்தது. இந்த நிகழ்வில் நடிகை நளினி நாயர், சென்னை ஹோட்டல் சங்கத்தின் மானியத் தலைவர் திரு ராம்தாஸ் ராவ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த கிளை தினமும் காலை 6 மணி முதல் இரவு 2 மணி வரை இயங்கும். மேலும் 600க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் இங்கே வழங்கப்படுகின்றன. நண்பர்களுடன் நேரம் செலவிட, குடும்பத்துடன் மனநிறைவு தரும் உணவைக் அனுபவிக்க, அல்லது இரவு நேர சிற்றுண்டிக்காக – போரூர் கீதம் உங்களை அன்போடு வரவேற்கத் தயாராக உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.