சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை பெற்றிருந்தாலும் இன்றளவும் தோனியின் பெயர் எப்பொழுதும் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஐசிசி தோனிக்கு ஹால் ஆஃப் ஃபேம் விருதை வழங்கி கௌரவித்தது. ஒவ்வொரு ஆண்டும் ஐசிசி கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களுக்கு ஹால் ஆஃப் ஃபேம் விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தோனி, ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெத்தியூ ஹைடன், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஸ்மித் மற்றும் ஆசிம் அம்லா, நியூஸிலாந்தின் டேனியல் வெட்டோரி, இங்கிலாந்தின் சாரா டெய்லர், பாகிஸ்தானின் சனா மிர் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
மேலும் படிங்க: ஆர்சிபி அணியில் இருந்து விலகுகிறாரா கோலி? என்ன பிரச்சனை?
சர்வதேச கிரிக்கெட்டில் தோனி
2004 ஆம் ஆண்டு இந்தியாவிற்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமான தோனி அதனை தொடர்ந்து மூன்று ஆண்டுகளிலேயே இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பையை இந்தியாவிற்கு கேப்டனாக இருந்து வென்று கொடுத்தார் தோனி. அதனை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு ஐசிசி ஒரு நாள் உலக கோப்பையை வென்று கொடுத்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்தியாவிற்கு வென்று கொடுத்தார் தோனி. இப்படி தொடர்ந்து பல்வேறு சாதனைகளை மேற்கொண்டு வந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை நம்பர் ஒன் இடத்திற்கு கொண்டு வந்த முதல் கேப்டன் தோனி தான்.
இந்தியாவிற்காக தோனி இதுவரை 350 ஒருநாள் கோடிகளில் விளையாடியுள்ளார். அதில் 10, 733 ரன்களும் அடித்துள்ளார். மேலும் இந்தியாவிற்காக 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 4876 ரன்கள் அடித்துள்ளார். கடைசியாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உளவுக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் விளையாடியிருந்த தோனி அந்த போட்டியுடன் ஓய்வை அறிவித்தார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் மட்டும் விளையாடி வருகிறார். தற்போது தோனி ஐபிஎல்லில் இருந்தும் ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்பாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் இருந்து வருகிறது. இருப்பினும் தோனியால் தற்போது பயிற்சியாளர் ஆக முடியாது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்கும் நபர் வேறு எந்த ஒரு கிரிக்கெட் அணிகளுடன் தொடர்பில் இருக்கக் கூடாது. கவுதம் கம்பீர் லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார், மேலும் மக்களவை எம்பி ஆகவும் இருந்தார். இந்த இந்த இரண்டு பொறுப்பிலிருந்தும் தன்னை நீக்கி கொண்ட பின்பு தான் அவரால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ஆக முடிந்தது. அதேபோல தற்போது தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு வீரராக இருந்து வருகிறார். சிஎஸ்கே அணியில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெற்ற பின்னர் அவரால் தலைமை பயிற்சியாளராக ஆக முடியும், அதுவரையில் அவர் தகுதி பெற மாட்டார். இருப்பினும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையின் போது இந்திய அணியின் மென்டராக செயல்பட்டார்.
மேலும் படிங்க: குளவுஸை தூக்கி வீசிய அஸ்வின்! தக்க பதிலடி கொடுத்த TNPL – முக்கிய அப்டேட்!