Ahmedabad Plane Crash: '169 இந்தியர்கள், 53 பிரிட்டீஷார்…' – ஏர் இந்தியா சொல்லும் எண்ணிக்கை என்ன?

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

இந்த விபத்து சம்பந்தமாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமான தகவல்களை வெளியிட்டிருக்கிறது.

Ahmedabad Airplane Crash
Ahmedabad Airplane Crash

ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டிருக்கும் பதிவில், “அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து Take Off ஆன AI 171 என்ற எண் கொண்ட விமானம் விபத்தில் சிக்கியிருக்கிறது.

விபத்துக்குள்ளான அந்த விமானம் மதியம் 1:38 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. போயிங் 787-8 ரக அந்த விமானத்தில் விமானக் குழுவினரோடு சேர்த்து மொத்தமாக 242 பேர் பயணித்திருந்தனர்.

அதில் 169 இந்தியர்களும் பிரிட்டனைச் சேர்ந்த 53 பேர், போர்ச்சுக்கலைச் சேர்ந்த 7 பேரும் அடக்கம்.

Ahmedabad Airplane Crash
Ahmedabad Airplane Crash

காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்.

1800 5691 444 மேற்கொண்டு பயணிகளைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கான உதவி எண்.

இந்த விபத்து குறித்த விசாரணைக்கு ஏர் இந்தியா முழுமையாக ஒத்துழைக்கும்” எனக் கூறியிருக்கிறது.

விமானத்தில் பயணித்த 230 பயணிகளின் விவரங்களும் வெளியாகியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.