சிம் கார்டு முதல் தட்கல் டிக்கெட் புக்கிங் வரை: ஆதார் அத்தெண்டிகேஷன் ஏன் முக்கியம்?

Aadhaar Authentication ; ரயில் டிக்கெட் புக்கிங் தொடர்பாக மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது. குறிப்பாக தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஏஜென்சிக்கள் ஆட்டோமேடிக் போட்கள் பயன்படுத்தப்படுவதாகவும், இதனால் பொதுமக்களால் தட்கல் ரயில் டிக்கெட் புக்கிங் செய்ய முடிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் பிரச்சனை குறித்து ரயில்வே அமைச்சகத்துக்கு பலரும் புகார்களாக தெரிவித்தனர். எக்ஸ் உள்ளிட்ட பக்கங்களில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை டேக் செய்தும் ரயில் டிக்கெட் புக்கிங்கில் நடக்கும் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து இதில் நடக்கும் பிரச்சனைக்கு ரயில்வே துறை செவிசாய்த்தது. அண்மையில் ரயில் டிக்கெட் புக்கிங்கில் புதிய விதிமுறையையும் மத்திய அரசு அமல்படுத்தியது. 

அதன்படி தட்கல் ரயில் டிக்கெட் புக்கிங்கிற்கு ஆதார் அத்தெண்டிகேஷன் கட்டாயம் என உத்தரவிட்டது. இதன் மூலம் ஆட்டோமேடிக் போட்களைக் கொண்டு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுவது கட்டுப்படுத்தப்படும். இந்த சூழலில் ஆதார் அத்தெண்டிகேஷன் முக்கியத்துவம் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். ஆதார் அத்தெண்டிகேஷன் என்பது ஒரு பயனரின் ஆதார் விவரங்களை (Aadhaar details) உறுதிப்படுத்தும் செயல்முறை. இது ஆன்லைன் & ஆஃப்லைன் இரண்டு முறைகளிலும் செய்யப்படுகிறது.

ஆதார் அத்தெண்டிகேஷன் எங்கே தேவை?

புதிய சிம் கார்டு (SIM Card) வாங்கும்போது, டாட்ட்கல் ரயில் டிக்கட் (Tatkal Train Ticket) புக்கிங் செய்ய, வங்கி விவரங்கள் (Bank Account) இணைக்க, GOVT ஸ்கீம்களின் நன்மைகள் பெற, பாஸ்போர்ட், லைசென்ஸ் போன்றவற்றுக்கும் இது தேவை. 

ஆதார் அத்தெண்டிகேஷன் எப்படி வேலை செய்கிறது?

மேலே குறிப்பிட்டத்தில் எந்த தேவைக்காக நீங்கள் சென்றாலும் ஆதார் எண்ணை உள்ளிடவும் (Aadhaar Number). OTP / பயோமெட்ரிக்ஸ் (OTP / Biometrics) மூலம் உங்கள் அடையாளம் உறுதிப்படுத்தவும். அதாவது, ரிஜிஸ்டர் செய்த மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதனை கொடுத்தால் உங்கள் அடையாளம் உறுதிப்படுத்தப்படும். இதுதவிர, பயோமெட்ரிக்ஸ் முறையில் விரல் அடையாளம் (Fingerprint) / ஐரிஸ் ஸ்கேன் (Iris Scan) ஆகியவை கொண்டும் ஒருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தலாம். இதனை UIDAI (Unique Identification Authority of India) உண்மையான விவரங்களை சரிபார்க்கும். அத்தெண்டிகேஷன் வெற்றிகரமாக முடிந்தால், சேவை வழங்குநர் (Service Provider) உங்களின் தேவைகளுக்கு ஒப்புதல் கொடுப்பார்

ஆதார் அத்தெண்டிகேஷன் வகைகள்

– OTP அத்தெண்டிகேஷன் – மொபைலில் OTP வந்து உறுதிப்படுத்தவும்.
– பயோமெட்ரிக் அத்தெண்டிகேஷன் – விரல் அடையாளம் / ஐரிஸ் ஸ்கேன்.
– QR கோட் ஸ்கேன் – ஆதார் கார்டில் உள்ள QR கோடை ஸ்கேன் செய்யவும்.

ஆதார் அத்தெண்டிகேஷனின் நன்மைகள்

– உடனடி அடையாள சரிபார்ப்பு (Instant Verification).
– ஃபேக் / டூப்ளிகேட் ஐடி தடுக்கப்படும்.
– ஆன்லைன் & ஆஃப்லைன் இரண்டிலும் செய்யலாம்.
– எந்த டாக்யுமெண்ட்ஸும் தேவையில்லை – ஆதார் எண் மட்டுமே போதும்.

IRCTC டாட்ட்கல் டிக்கட் புக்கிங் – புதிய விதிகள்

– ஜூலை 1, 2025 முதல், IRCTC அக்கவுண்டை ஆதாருடன் இணைக்க வேண்டும்.
– ஆதார் OTP / பயோமெட்ரிக்ஸ் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
– இல்லையெனில், தட்கல் ரயில் டிக்கட் புக்கிங் செய்ய முடியாது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.