மேற்கு வங்கம், கேரளா உட்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: குஜராத்தில் பாஜக, ஆம் ஆத்மி ஒரு தொகுதியில் வெற்றி

அகமதாபாத்: ​நான்கு மாநிலங்​களில் 5 சட்​டப்​பேரவை தொகு​தி​களுக்கு நடந்த இடைத்​தேர்​தலில், குஜ​ராத்​தில் ஆளும் பாஜக, ஆம் ஆத்மி கட்சி தலா ஒரு தொகு​தி​களை கைப்​பற்​றின. கேரளா, குஜ​ராத், பஞ்​சாப், மேற்​கு​வங்​கம் ஆகிய 4 மாநிலங்​களில் 5 சட்​டப்​பேரவை தொகு​தி​களுக்கு கடந்த 19-ம் தேதி இடைத்​தேர்​தல் நடை​பெற்​றது. அவற்​றில் பதி​வான வாக்​கு​கள் நேற்று எண்​ணப்​பட்டன.

கேரளா​வில் உள்ள நிலாம்​பூர், குஜ​ராத்​தில் உள்ள விஸ​வாதர் மற்று கடி, பஞ்​சாபில் மேற்கு லூதி​யா​னா, மேற்கு வங்​கத்​தில் காளி​கஞ்ச் ஆகிய 5 சட்​டப்​பேரவை தொகு​தி​களுக்கு இடைத்​தேர்​தல் நடை​பெற்​றது. குஜ​ராத் மாநிலம் விஸ​வாதர் தொகு​தி​யில் ஆம் ஆத்மி எம்​எல்ஏ பூபேந்​திர பயானி, பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு பாஜக.​வில் இணைந்​தார். அதனால் அங்கு இடைத்​தேர்​தல் நடை​பெற்​றது. அங்கு ஆம் ஆத்மி கட்​சியை சேர்ந்த கோபால் இடா​லியா வெற்றி பெற்​றார். பாஜக வேட்​பாளர் கிரித் படேலை விட கோபால் 17,581 வாக்​கு​கள் அதி​கம் பெற்று வெற்றி பெற்​றார்.

அதே​நேரத்​தில் குஜ​ராத்​தின் கடி தொகுதி பட்​டியல் இனத்​தவருக்​காக ஒதுக்​கப்​பட்​டது. இங்கு பாஜக​வின் ராஜேந்​திர சவ்​தா, காங்​கிரஸ் கட்​சி​யின் ரமேஷ் சவ்​தாவை 38,904 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​கடித்​தார். இந்​தத் தொகு​தி​யில் பாஜக எம்​எம்ஏ கர்​சன்​பாய் சோலங்கி கால​மான​தால் இடைத்​தேர்​தல் நடந்​தது.

கேரளா​வின் நிலாம்​பூரில் சுயேச்சை எம்​எல்ஏ பிவி அன்​வர் பதவியை ராஜி​னாமா செய்​தார். அதனால் இடைத்​தேர்​தல் நடந்​தது. கேரளா​வில் ஆளும் இடது​சாரி கூட்​டணி வேட்​பாளர் ஸ்வ​ராஜை விட, காங்​கிரஸ் வேட்​பாளர் ஆர்​யதன் சவு​கத் 11,000 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றார். இது ஆளும் கம்​யூனிஸ்ட் கட்​சிக்கு பின்​னடை​வாக கருதப்​படு​கிறது.

பஞ்​சாப் மாநிலம் மேற்கு லுா​தி​யானா ஆம் ஆத்மி எம்​எல்ஏ குர்​பிரீத் பஸ்ஸி கால​மா​னார். அதனால் இடைத்​தேர்​தல் நடை​பெற்​றது. தேர்​தலில் ஆம் ஆத்மி வேட்​பாளர் சஞ்​சீவ் அரோரா 35,179 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றுள்​ளார். இவரை எதிர்த்து போட்​டி​யிட்ட காங்​கிரஸ் வேட்​பாளர் பரத் பூஷன் அஷூ 24,542 வாக்​கு​கள் பெற்று 2-வது இடம் பிடித்​துள்​ளார்.

மேற்கு வங்க மாநிலத்​தில் காளி​கஞ்ச் தொகு​தி​யில் திரிண​மூல் காங்​கிரஸ் எம்​எல்ஏ நசிருதீன் அகமது கால​மா​னார். இந்​தத் தொகு​தி​யில் நடை​பெற்ற இடைத்​தேர்​தலில் ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ்​ வேட்​பாளர்​ அலிஃ​பா அகமது வெற்​றி பெற்​றார்​.

மே.வங்க கொண்டாட்டத்தில் சிறுமி உயிரிழப்பு: மேற்கு வங்க மாநிலம் காளிகஞ்ச் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள், வெற்றி கொண்டாட்டத்தில் இறங்கினர். இதனிடையே திரிணமூல் வேட்பாளர் ஆலிபா அகமதுவை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் வீட்டின் மீது பட்டாசுகளையும், நாட்டு வெடிகுண்டுகளையும் போட்டு தங்களது மகிழ்ச்சியை தொண்டர்கள் கொண்டாடினர்.

பரோசந்த்நகர் பகுதியில் திரிணமூல் தொண்டர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வெடித்து கொண்டாடினர். அப்போது நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பரோசந்த் நகர் பகுதியை சேர்ந்த சிறுமி தமன்னா கதுன் உயிரிழந்தார். இதையடுத்து போலீஸார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தையொட்டி முதல்வர் மம்தா பானர்ஜி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்த சம்பவத்தால் நான் மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். சிறுமியின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.