அதிமுக துணையுடன் திமுக கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம்: சங்கரன்கோவில் ‘சம்பவம்’

சங்கரன்கோவிலில் திமுக நகர்மன்ற தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே அதிமுக-வுடன் அலையன்ஸ் போட்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அறிவாலயத்தை அதிரவைத்திருக்கிறார்கள்.

30 வார்​டு​களை கொண்ட சங்​கரன்​கோ​வில் நகராட்​சி​யில் 9 வார்​டு​களில் திமுக வென்​றது. 12 வார்​டு​களை அதி​முக கைப்​பற்​றியது. இருந்தபோதும் கூட்​டணி கட்​சி​களின் தயவில் நகராட்சி தலை​வர் பதவியை அதிர்​ஷ்டக் குலுக்​களில் கைப்​பற்​றியது திமுக. தென்​காசி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்​பாளர் சரவணனின் மனைவி உமா மகேஸ்வரி சேர்​ம​னா​னார். அதி​முக-வைச் சேர்ந்த கண்​ணன் (எ) ராஜு வைஸ் சேர்​ம​னா​னார்.

ஆரம்​பம் முதலே சேர்​மன் உமா மகேஸ்​வரிக்​கும் திமுக கவுன்​சிலர்​களுக்​கும் அவ்​வள​வாய் ஒத்​துப்​போக​வில்​லை. அதி​முக கவுன்​சிலர்​களு​டன் திமுக கவுன்​சிலர்​கள் சிலரும் சேர்ந்​து​கொண்டு உமா மகேஸ்​வரிக்கு எதி​ராக கொடிபிடித்​தனர். இதனால் கவுன்​சில் கூட்​டத்​தில் தீர்​மானங்​களை நிறைவெற்​றவே சிரமப்​பட்​டார் உமா மகேஸ்​வரி. அதே​போல் உமா மகேஸ்​வரி, ஆளும் கட்சி கவுன்​சிலர்​களைக் கூட மதிப்​ப​தில்லை என்ற குற்​றச்​சாட்​டும் வெடித்​தது. இதனால் 2023 டிசம்​பரில் உமா மகேஸ்​வரிக்கு எதி​ராக நம்​பிக்கை இல்லா தீர்​மானத்​தைக் கொண்டு வந்​தார்​கள். ஆனால் அப்​போது, அமைச்​சர்​கள் தலை​யிட்டு தீர்​மானத்தை வாக்​கெடுப்​புக்கு வரவி​டா​மல் தடுத்​தார்​கள்.

இந்த நிலை​யில், பொது​மக்​களுக்​கான அடிப்​படை வசதி​களை செய்து தரவில்​லை, கவுன்​சில் கூட்​டத்தை முறை​யாக கூட்​ட​வில்​லை, நகராட்​சி​யில் தொட்​டது அனைத்​தி​லும் ஊழல் நடக்​கிறது என்​பது உள்​ளிட்ட புகார்​களைச் சொல்லி திமுக, அதி​முக உள்​ளிட்ட 24 கவுன்​சிலர்​கள் சேர்ந்து மீண்​டும் உமா மகேஸ்​வரிக்கு எதி​ராக நம்​பிக்கை இல்லா தீர்​மானத்தை தாக்​கல் செய்​திருக்​கி​றார்​கள். இதன் மீதான வாக்​கெடுப்பு ஜூலை 2-ம் தேதி நடை​பெறும் என அறி​வித்​திருக்​கி​றார் நகராட்சி ஆணை​யர்.

இதற்​கிடையே, சேர்​மன் தரப்​பை​யும் அதிருப்தி திமுக கவுன்​சிலர்​களை​யும் திமுக தலைமை அழைத்​துப் பேசி இருக்​கிறது. இப்​போது, இந்​தப் பிரச்​சினையை சுமுக​மாக பேசி முடிக்​கும் பொறுப்பை தென்​காசி வடக்கு மாவட்ட திமுக செய​லா​ள​ரும் எம்​எல்​ஏ-வு​மான ஈ.ராஜா​விடம் ஒப்​படைத்​திருக்​கி​றார்​கள். ஆனால், ராஜாவே உமா மகேஸ்​வரி மீது அதிருப்​தி​யில் இருப்​ப​தாகக் கூறும் சிலர், “கடந்த முறை நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் கொண்டு வந்​த​போது அனை​வரை​யும் ‘முறை​யாக’ கவனித்​துத்​தான் பிரச்​சினையை முடித்​தார்​கள். தற்​போதும் அந்த ‘மரி​யாதையை’ எதிர்​பார்த்​துத்​தான் சிலர் இந்​தக் காரி​யத்​தில் இறங்கி இருக்​கி​றார்​கள்” என்று சொல்​கி​றார்​கள்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய வைஸ் சேர்​மன் கண்​ணன் என்ற ராஜு, “நக​ராட்சி கூட்​டத்தை மாதா மாதம் நடத்​தாமல் 3 மாதங்​களுக்கு ஒரு முறை​தான் நடத்​துகி​றார்​கள். வார்​டு​களில் எந்த வேலை​யும் நடக்​காத​தால் திமுக கவுன்​சிலர்​களே அதிருப்​தி​யில் உள்​ளனர். நகராட்சி நிர்​வாகத்​தில் சேர்​மனின் கணவர் தலை​யீடு அதி​க​மாக உள்​ள​தால் அதி​காரி​களும் அதிருப்​தி​யில் உள்​ளனர். முதல் முறை நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் கொண்​டு​வந்​த​போது மேலிடத்​தின் அழுத்​தம் காரண​மாக, திமுக கவுன்​சிலர்​கள் வாக்​கெடுப்​பில் கலந்து கொள்​ள​வில்​லை. அதனால் கூட்​டம் கோரம் இல்​லாமல் முடிந்​தது. பணத்​தால் அனைத்​தை​யும் சரி செய்​து​விடலாம் என நினைக்​கி​றார்​கள். ஆனால், கடந்த முறை தலை​மைக்கு கட்​டுப்​பட்ட திமுக கவுன்​சிலர்​கள் இம்​முறை​யும் அப்​படி கட்​டுப்​படு​வார்​களா என்று தெரிய​வில்​லை” என்​றார்.

நம்​பிக்கை இல்லா தீர்​மானத்​தில் கையெழுத்​திட்ட திமுக கவுன்​சிலர்​களில் ஒரு​வர் கூறும்​போது, “அதி​முக கவுன்​சிலர்​களின் வார்​டு​களில் எல்லா வேலை​களும் நடக்​கிறது. ஆனால், திமுக கவுன்​சிலர்​களின் வார்​டு​களில் எந்த வேலை​யும் நடக்​க​வில்​லை. இந்​தப் பிரச்​சினையை தலை​மை​யின் கவனத்​துக்கு கொண்டு சென்​ற​தால் தலைமை சேர்​மனை அழைத்து கண்​டித்​தது.

அதன் பிறகு அதி​முக கவுன்​சிலர்​களுக்கு ஆதர​வாக சேர்​மன் செயல்​பட​வில்​லை. அதனால் அதிருப்​தி​யடைந்த அதி​முக கவுன்​சிலர்​கள் இப்​போது எங்​களோடு சேர்ந்து சேர்​மனுக்கு எதி​ரான நம்​பிக்​கை​யில்லா தீர்​மானத்​தில் கையெழுத்​திட்​டிருக்​கி​றார்​கள். அடுத்​த​தாக திமுக மாவட்​டச் செய​லா​ளரின் ஆதர​வுடன் திமுக-வைச் சேர்ந்த புனி​தாவை சேர்​ம​னாக்க வேலை​கள் நடக்​கிறது. இது தெரி​யாமல் பிரச்​சினையை பேசி முடிக்​கும் பொறுப்பை மாவட்டச் செய​லா​ளரிடம் ஒப்​படைத்​திருக்​கிறது திமுக தலை​மை. ஆனால் அவர், இதற்​காக எந்த முயற்​சி​யும் எடுத்​த​தாக தெரிய​வில்​லை” என்​றார்.

இதுகுறித்து சேர்​மன் உமா மகேஸ்​வரிக்​காக நம்​மிடம் பேசிய அவரது கணவர் சரவணன், “தி​முக கவுன்​சிலர்​களிடம் தலைமை பேச்​சு​வார்த்தை நடத்​தி​யுள்​ளது. பிரச்​சினை சுமுக முடிவுக்கு வரும். நல்ல முடிவு விரை​வில் கிடைக்​கும்” என்று மட்​டும் சொன்​னார். மாவட்​டச் செய​லா​ளர் ராஜாவோ, “கவுன்​சிலர்​களிடம் பேசி சமா​தானப்​படுத்தி உள்​ளோம். உமா மகேஸ்​வரியே தொடர்ந்து சேர்​ம​னாக செயல்​படு​வார். நல்ல முடிவு ஏற்​படும்” என்​றார்.

தேர்​தல் நெருங்க நெருங்க அறி​வால​யத்​துக்கு உடன்​பிறப்​பு​கள் இன்​னும் என்​ன​வெல்​லாம் அதிர்ச்சி வைத்​தி​யம் கொடுக்​கப் போகிறார்​களோ!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.