இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வு
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்4 நிலை (கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், ஸ்டெனோகிராபர், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையர்) பணிகளுக்கான தேர்வு இன்று காலை 9 மணிக்கு தொடங்கிநடைபெறுகிறது.
தேர்வர்கள் கருப்பு பால்பாயிண்ட் பேனா பயன்படுத்தி ஓஎம்ஆர் சீட்டை நிரப்ப வேண்டும். மேலும் ஹால் டிக்கெட், முகக்கவசம் (மாஸ்க்) உள்ளிட்டவை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். காலியாகவுள்ள 7301 பணியிடங்களுக்கு 21.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்வானது 38 மாவட்டம் 316 தாலுகா மையங்களில் உள்ள 7,689 மையங்களில் நடைபெறுகின்றது. முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க 534 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளன.
பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றம் இல்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை ரூ.94.24க்கும் விற்பனையாகிவருகிறது.
செஸ் ஒத்திகை போட்டியை தொடங்கும் உதயநிதி!
சென்னையில் 44ஆவது செஸ் போட்டிகள் அமைக்கும் அரங்குகள் தயார் நிலையில் உள்ளன. இங்கு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஒத்திகை செஸ் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதனை சேப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார் என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக செஸ் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில், ஏஆர் ரஹ்மான் இசையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தோன்றிய பாடல் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
ரிசர்வ் வங்கிக்கு ஓபிஎஸ் கடிதம்
அதிமுக அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை முடக்குமாறு ஓ.பன்னீர் செல்வம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி சென்னை மண்டல இயக்குனருக்கு ஓ. பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகள் மற்றும் 2 வைப்பு கணக்குகளை முடக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக அதிமுகவின் பொருளாளர் என திண்டுக்கல் சீனிவாசனை நியமித்து அனுப்பப்பட்ட கடிதத்தை அதிமுக கணக்குகள் உள்ள வங்கிகள் ஏற்றுக்கொண்டன என்பது நினைவு கூரத்தக்கது.
கேரளாவில் 2 பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதி. பாதிப்பு பதிவான 2 பண்ணைகளில் உள்ள 360 பன்றிகளை கொல்ல அரசு முடிவு.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ்.
உலக தடகள போட்டி : ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல். இந்தியாவின் 19 ஆண்டுகால பதக்கக் கனவை நிறைவேற்றினார் நீரஜ் சோப்ரா. 88.13 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து வெள்ளிப் பதக்கத்தை தன்வசப்படுத்தினார் நீரஜ் சோப்ரா.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஜூலை 27ஆம் தேதிவரை நான்கு நாள்களுக்கு திருத்தம் செய்துக்கொள்ளலாம்.
இந்தத் திருத்தங்களை சம்பந்தப்பட்ட இணைய தளத்திற்கு சென்று மேற்கொள்ளலாம்.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ஆட்டத்துக்கு முந்தைய இன்றைய பயிற்சி ஆட்டத்தில் 1,414 பேர் பங்கெடுக்கின்றனர். இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரூ.5 லட்சம் பரிசு அளிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் சர்வதே செஸ் ஒலிம்பியாட் போட்டி நடுவர் லாரண்ட் பிரைட் உள்பட 90 நடுவர்கள் வருகை புரிந்துள்ளனர். இவர்கள், செஸ் போட்டியை நடத்துவது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.