மனைவி மேல் சந்தேகம்… ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பரமார்த்தலிங்கபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஆண்டனி பெனிஸ்டர் (30). இவர் புதிய வீடுகளுக்கு உள் அலங்காரம் செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பத்மா (30). காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். வீட்டில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் நேற்று காலையில் குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பிறகு பத்மா யாரிடமோ நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனை கவனித்த ஆண்டனி பெனிஸ்டர், பத்மாவை கண்டித்துள்ளார். பதிலுக்கு அவர் உதாசீனப்படுத்த இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஆண்டனி பெனிஸ்டர் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

இந்த நிலையில் காலை 10 மணிக்கு பத்மாவை தையல் வகுப்புக்கு அழைத்து செல்வதற்காக அவருடைய தந்தை வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு பத்மா பேச்சு, மூச்சு இன்றி படுக்கையில் மயங்கி கிடந்தார். வெகுநேரம் எழுப்பியும் அவர் எழும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய தந்தை உடனே வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பத்மா பிணமாக கிடந்தது தெரியவந்தது. 

ஆனால் அவரது உடலில் எந்த காயமும் இல்லை. எனவே பத்மா தற்கொலை செய்திருக்கலாம் என்று முதலில் போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே நேரத்தில் பத்மா மர்மமான முறையில் இறந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

முதற்கட்டமாக பத்மாவின் கணவர் ஆண்டனி பெனிஸ்டரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஆண்டனி பெனிஸ்டர் வடசேரி காவல் நிலையத்திற்கு வந்து சரண் அடைந்தார். அப்போது தன்னுடைய மனைவி பத்மாவை நான் தான் கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என்று போலீசாரிடம் தெரிவித்தார். பின்னர் ஆண்டனி பெனிஸ்டரை போலீசார் கைது செய்தனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.