வேலூர் மாவட்டம் திருமலைக்கோடி அருகே உள்ள ஸ்ரீபுரம் தங்க கோவில் உள்ளது. இந்த வளாகத்தில் 23 அடி உயர ஐம்பொன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 23 அடி உயரம் 18 அடி அகலம் 15 ஆயிரம் கிலோ ஐம்பொன்னால் 4 கோடி ரூபாய் மதிப்பில் இந்த சிலை செய்யப்பட்டுள்ளது.

இந்த சிலை தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திம்மக்குடியை சேர்ந்த சிற்பச்சாலை உரிமையாளர் வரதராஜன். இவர் வேலூர் பொற்கோயிலுக்காக 2010-ம் ஆண்டு 23 அடி நடராஜர் சிலை செய்ய ஐம்பொன் உலோகங்களை கொண்டு ஒற்றை வார்ப்பு முறையில் ஊற்றி பணியை தொடங்கினார்.
பின்னர் போதிய நிதி இல்லாததால் அந்த பணி பாதியில் நின்றது. 2012-ம் ஆண்டு வேலூர் நாராயண சக்தி பீடத்தின் ஒத்துழைப்போடு மீண்டும் பணிகள் துவங்கப்பட்டு 10 ஆண்டில் பணிகள் முடிவடைந்தது. இதைதொடர்ந்து கடந்த மாதம் 12-ம் தேதி நடராஜர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ஏராளாமனோர் வழிபட்டு சென்றனர்.
இந்நிலையில் ஆனந்த தாண்டவ நடராஜர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பீடம் தனியாகவும், திருவாச்சியுடன் சாமி தனியாகவும் கிரேன் உதவியுடன் தனித்தனியாக பிரிக்கப்பட்டு கடந்த 6-ம் தேதி மாலை 2 லாரிகளில் வேலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சிலை தற்போது ஸ்ரீபுரம் தங்கக் கோவில் அருகே உள்ள திருமண மண்டப வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை சக்தி அம்மா திறந்து வைத்தார். நாராயணி பீட இயக்குனர் சுரேஷ், மேலாளர் சம்பத் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.