
நாட்டின் 5ஆவது வந்தே பாரத் ரயில் சேவையான சென்னை – மைசூரு இடையே சோதனை ஓட்டம் தொடங்கியது. இதனை பிரதமர் மோடி வரும் 11ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
நாட்டிலேயே அதிக வேகமாக செல்லும் “வந்தே பாரத்” ரயில் சென்னை ஐ.சி.எப். உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தயாரிக்கப்படுகிறது. 160 கி.மீ. வேகத்தில் இயக்கக் கூடிய இந்த ரயிலில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.
இந்த ரயில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை வெறும் 52 வினாடிகளில் எட்டி விடும். அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும். இப்படி பல்வேறு வசதிகளை கொண்டது வந்த பாரத் ரயில்.

வந்தே பாரத் ரயில்கள் ஏற்கனவே டெல்லி – வாரணாசி, டெல்லி – ஸ்ரீ மாதா வைஸ்னோ தேவி கத்ரா, காந்தி நகர் – மும்பை, அம்ப் அந்தாரா – டெல்லி என 4 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், 5ஆவது வந்தே பாரத் ரயில் தென்னிந்தியாவின் சென்னை – பெங்களூரு மற்றும் மைசூரு இடையே இயக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது.
இந்தியாவின் 5வது வந்தே பாரத் ரெயில் சேவையை வரும் 11ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
newstm.in