வாய் பேச முடியாத பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் கடந்த மாதம் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத பெண் ஒருவர் ஒரு கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. இந்த வழக்கு குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் வன்கொடுமை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுனில் விஷ்னோய் (21) மற்றும் பஜன் லால் பிஷ்னோய் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 24ஆம் தேதி அன்று, ஆடு மேய்க்கச் சென்ற 20 வயது பெண் அடையாளம் தெரியாத நான்கைந்து நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த பெண்ணால் பேசவோ, கேட்கவோ முடியாத காரணத்தாலும், சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் யாரும் இல்லாததால், அடையாளம் தெரியாத குற்றவாளியின் பெயரைக் கூறுவது காவல்துறைக்கு பெரும் சவாலாக இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
newstm.in