செல்லம்மா தொடரில் இருந்து வெளியேறிய காரணம் இது தான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருப்பது பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார்.

பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீஷ் நடித்து வருகிறார். மேலும், இந்த தொடரில் இவர்களுடன் ரேஷ்மா, விஷால், ரித்திகா, வேலு லட்சுமணன், நேகா மேனன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடர் பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை.

இந்த தொடரில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ். இவர் சின்னத்திரை சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி தொடர் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இவர் ஏற்கனவே லட்சுமி வந்தாச்சு, சுமங்கலி போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கிறார்.தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் தனெக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருக்கிறார். அதேபோல் திவ்யா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா என்ற தொடரிலும் மேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது செல்லம்மா சீரியலில் இருந்து திவ்யா விலகி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.அவருக்கு பதிலாக தற்போது புதிய மேகா கதாபாத்திரத்தில் ஸ்ரேயா என்பவர் நடிக்க வந்திருக்கிறார். அந்த எபிசோடும் சீரியலில் ஒளிபரப்பாகி இருக்கிறது.இப்படி ஒரு நிலையில் செல்லம்மா தொடரில் இருந்து வெளியேறிய காரணம் குறித்து பேசி இருக்கும் திவ்யா ‘என்னுடைய சொந்த பிரச்சனையால் நான் அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படி சொல்ல மாட்டேன். என்னுடைய சொந்த விஷயத்தினால் நான் வெளியேறவே இல்லை. என்னை அங்கே சிலர் வேலை செய்ய விடாமல் சிலர் தொந்தரவு செய்வதால் தான் இந்த சீரியலில் இருந்து விலகுகிறேன்’ என்று கூறியுள்ளார் திவ்யா.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.