இன்ஸ்டா பிரபலமான சத்தீஸ்கரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ராய்கரில் கெலோ விஹார் காலனியில் வசித்து வந்த லீனா நாக்வன்ஷி (22) என்ற இளம்பெண் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார்.
பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்த இவருக்கு ஒரு ஆண் நண்பர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் வீட்டிலுள்ள தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணையை தொடங்கினர்.
சம்பவ இடத்திலிருந்து தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. அவரது மொபைல் போனை கைப்பற்றியுள்ள போலீஸ், தனிப்பட்ட காரணங்களால் லீனா தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர்.
அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான உறுதியான காரணம் எதுவும் இதுவரை தெரியவரவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு மும்பையை சேர்ந்த இளம் சீரியல் நடிகை துனிஷா ஷர்மா ஷூட்டிங்கின்போது தனது ஓய்வறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in