அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000!!

ஆட்சியை பிடித்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது.

கர்நாடகாவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வரும் மே மாதத்திற்கு முன்பாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதே அங்கே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.

குறிப்பாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. கர்நாடகாவில் 200 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் ஏற்கனவே வாக்குறுதி அளித்தது.

இந்நிலையில் , காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ 2 ஆயிரம் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி இந்த வாக்குறுதியை அளித்தார். கிருஹ லட்சுமி என பெயரிடப்பட உள்ள இந்த திட்டத்தின் கீழ் சுமார் 1.5 கோடி குடும்பத்தலைவிகள் பயனடைவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.