சட்டவிரோத பைக் ரேஸ் பேராபத்து தரும்… ஓட்டுபவருக்கு மட்டுமல்ல என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கோவளம் பைபாஸ் சாலையில் இன்று அதிகாலை இளைஞர்கள் சிலர் பைக் ரேசில் ஈடுபட்டுள்ளனர். பைபாஸ் சாலையில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, திருவளம் பகுதியை சேர்ந்த 53 வயதான சிந்து என்ற பெண் காலை சாலையோரம் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.

நடைபயிற்சியின் போது சிந்து பைப்பாஸ் சாலையை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது, ரேசில் 24 வயது இளைஞன் ஓட்டி வந்த பைக் சாலையை கடக்க முயன்ற சிந்து மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. பைக் மோதியதில் சிந்து தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த சிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்தில் பைக்கை ஓட்டி வந்த இளைஞர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், படுகாயமடைந்த அந்த இளைஞரும் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலைகளில் இளைஞர்கள் மேற்கொள்ளும் பைக் ரேஸ்களால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. பைக் ரேசை தடுக்க போலீசார் பல நடவடிக்கை எடுத்தபோதும் சட்டவிரோதமாக இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.