புதுச்சேரி அரசு நிறுவனமான பாண்லே, உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்து நுகர்வோருக்கு விற்பனை செய்கிறது.அதேநேரத்தில் பால் பற்றாக்குறையால் வெளிமாநிலங்களில் இருந்து பாலை பாண்லே கொள்முதல் செய்து வருகிறது.
இந்நிலையில், இந்த பால் நாளொன்றுக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் லிட்டர் மக்களின் தேவையாக உள்ளது. ஆனால் கடந்த மாதம் 80 ஆயிரம் லிட்டர் மட்டுமே பால் சப்ளை செய்யப்பட்டது. இதனால் கடுமையான பால் தட்டுப்பாட்டால் மக்கள் திண்டாடினார்கள்.
புதுவையில் 11 ஆவது நாளாக பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால் பூத்துகளுக்கு வழங்கப்படும் பால் சப்ளையின் அளவும் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் பூத்துகளுக்கு வரும் பால் உடனடியாக விற்று தீர்ந்து விடுகிறது. எனவே தனியார் பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வெளிமாநிலங்களில் பால் கொள்முதல் செய்வது தொடர்பாக அதிகாரிகளுக்கு இடையே மோதல் இருந்து வருவதாகவும், அவர்களுக்கு இடையே ஒற்றுமை ஏற்படும் வரை பால் தட்டுப்பாடு இருந்துகொண்டேதான் இருக்கும் என்று ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.