தொடரும் சோகம்..!! மீண்டும் ஒரு ஆழ்த்துணை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் பலி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் கடந்த (மார்ச் 14) செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் 60 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த எட்டு வயது சிறுவனை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். 60 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 43 அடியில் சிக்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.

மத்தியப் பிரதேசத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ஐந்து வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்தான். தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) அதிகாரிகளின் கூற்றுப்படி, திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தற்செயலாக 200 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 20 அடியில் சிக்கிக் கொண்டான். செவ்வாய்க்கிழமை காலை ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சிறுவனை மீட்க மீட்புப் படையினர் முயன்றபோது, அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.