அஸ்ஸாம்: சிறைக்குள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

அஸ்ஸாம் மாநிலத்தின் ஸ்ரீபூமி மாவட்டத்தில் சிறைக் காவளர்களாகப் பணியாற்றுபவர்கள் பிரஜேந்திர கலிதா (50) மற்றும் ஹரேஷ்வர் கலிதா (47).

இவர்கள் இருவரும் இரவில் சிறைச் சாலைக்கு வெளியே ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, நள்ளிரவு 1 மணியளவில் அந்தப் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வந்திருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

அந்தப் பெண்ணைச் சிறைச் சாலைக்குள் இழுத்துச் சென்று இரண்டு காவலர்களும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்.

இதை அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் பார்த்து, இருவரையும் சம்பவ இடத்திலேயே பிடித்திருக்கின்றனர்.

மேலும் இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், இருவரையும் காவல்துறை கைது செய்திருக்கிறது.

இரண்டு காவலர்களின் செயல், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும், பெண் உரிமை சார்ந்து இயங்கக்கூடியவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து பேசிய மூத்த காவல்துறை அதிகாரி, “ஸ்ரீபூமி சதார் காவல் நிலைய காவலில் இருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அதிகாலை 1:00 மணி முதல் 1:30 மணிக்குள் இந்த சம்பவம் நடந்திருக்கலாம்.

காவல்துறை
காவல்துறை

தகவல் கிடைத்த உடனே சம்பவ இடத்தை அடைந்தோம். பாலியல் வன்கொடுமை நடந்தது உறுதி செய்யப்பட்டது.

விரிவான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடக்கும். அந்தப் பெண் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, தற்போது அருகிலுள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.