சென்னை: அனைத்து ரயில்களிலும் ஏன் தானியங்கி கதவுகளை நிறுவ முடியாது?” என கேள்வி எழுப்பிய மும்பை உயர்நீதிமன்றம் , அதுகுறித்து பரிசிலிக்கும்படி ரயில்வே துறைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புறநகர் ரயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக ரயிலில் தொங்கியபடி சென்ற பயணிகள் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கீழே விழுந்தவர்களில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 8 பேர் படுகாயங்களோடு […]
