அமீரின் படத்தில் சஞ்சிதா செட்டி

9 வருடங்களுக்கு பிறகு அமீர் இயக்கும் படம் “இறைவன் மிகப்பெரியவன்”. இந்த படத்திற்கு வெற்றிமாறன் – தங்கம் இருவரும் கதை எழுதுகின்றனர். இதில் சூரி மற்றும் ஆர்யா தம்பி சத்யா நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு தற்பொழுது சென்னையில் நடைபெற்று வருகிறது. ஜே எஸ் எம் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் நாயகி பற்றிய அறிவிப்பு வெளியாகத நிலையில் இப்போது சத்யாவிற்கு ஜோடியாக நடிகை சஞ்சிதா செட்டி நடித்து … Read more

இரண்டாமாண்டு பி.யு.சி., செயல்முறை தேர்வு துவக்கம்| Dinamalar

பெங்களூரு-கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களில் இரண்டாமாண்டு பி.யு.சி.,க்கான செயல்முறை தேர்வு துவங்கியது.மாநிலத்தில் பி.யு., கல்வித்துறையின் சார்பில் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு பொது செயல்முறை தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் துவங்குவதற்கு ஏற்கனவே அட்டவணை அறிவிக்கப்பட்டது.இருப்பினும், பல மாவட்டங்களில் பி.யு.சி., கல்லுாரிகள் அரைகுறையாகவே செயல்படுகின்றன.சில மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நேற்று முதல் செயல்முறை தேர்வுகளை துவங்கி விட்டனர்.அந்தந்த மாவட்ட பி.யு.சி., கல்வித்துறை அதிகாரிகளுக்கு செயல்முறை தேர்வுகளை மாற்றி நடத்துவதற்கான அதிகாரம் இருப்பதால் சில மாவட்டங்களில் தேர்வுகள் நடத்தப்படவில்லை.தேர்வுகளை நடத்த மார்ச் … Read more

ஆலியா பட் படத்துக்கு தடை கேட்டு வழக்கு

மும்பை பெண் தாதா கங்குபாய் கத்தியவாடி வாழ்க்கையை மையமாக கொண்டு அதே பெயரில் படம் தயாராகி உள்ளது. இதில் கங்குபாயாக ஆலியா பட் நடித்துள்ளார். அஜய் தேவ்கன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி உள்ளார். இந்த படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதில் மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் வசித்த கங்குபாய் எப்படி பெண் தாதா ஆனார் என்பது குறித்து சுருக்கமாக சொல்லப்பட்டு இருந்தது. வருகிற 25ம் தேதி … Read more

ரஷ்ய-உக்ரைன் போர் மூண்டால் உலக நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்: ஐ.நா., தலைவர்| Dinamalar

முனீச்: ரஷ்ய-உக்ரைன் போர் மூண்டால் உலக நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்கவேண்டி இருக்கும் என ஐநா தலைவர் அண்டோனியோ கட்டர்ஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபைத் தலைவர் அண்டோனியோ கட்டர்ஸ் முனீச் பாதுகாப்பு கூட்டத்தில் இன்று கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் ரஷ்யா சார்பாக யாரும் கலந்து கொள்ளாத நிலையில் ரஷ்ய-உக்ரைன் எல்லை போர் மிகவும் ஆபத்தானது என்று கருத்து தெரிவித்துள்ளார். ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளின் எல்லையில் தற்போது பதற்றம் நீடித்து வருகிறது. முன்னாள் சோவியத் … Read more

இந்தியாவில் 25 ஆயிரமாக குறைந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் நேற்று 30,757 ஆக இருந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு, கடந்த 24 மணிநேரத்தில் 25 ஆயிரம் பேராக குறைந்தது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,920 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,27,80,235 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 66,254 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,19,77,238 ஆனது. தற்போது 2,92,092 … Read more

புதிய சமையல் நிகழ்ச்சி குக்கிங் கில்லாடிஸ்: 20ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது

விஜய் டி.வியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு அதே மாதிரியான ஜாலியான சமையல் நிகழ்ச்சியை மற்ற சேனல்களும் ஒளிபரப்ப தொடங்கி விட்டது. முன்னணி சேனல் ஒன்று பெரிய சினிமா நடிகரை வைத்து சர்வேதச கான்செப்டில் நடத்திய சமையல் நிகழ்ச்சி பெரிய தோல்வியை தழுவியது. விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை தொடங்கி விட்டது. இந்த நிலையில் தற்போது கலைஞர் தொலைக்காட்சி குக்கிங் கில்லாடிஸ் என்ற நிகழ்ச்சியை தொடங்கி உள்ளது. இந்த … Read more

அவசரப்பட்டு ஊரடங்கை கைவிடக்கூடாது: உலக சுகாதார அமைப்பு| Dinamalar

ஜெனிவா: உலக நாடுகள் அவசரப்பட்டு ஊரடங்கை கைவிடக்கூடாது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.உலகம் முழுவதும் தற்போது ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அவ்வப்போது உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுப்பது வழக்கம். ஒமைக்ரான் பரவல் அதிகரித்தாலும் இதனால் பலியாகுபவர்களது எண்ணிக்கை மிகமிகக் குறைவாக உள்ளதன் காரணமாக தற்போது உலக நாடுகள் பல ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. ஆனால் உலக சுகாதார அமைப்பு வைரஸ் தாக்கம் இன்னும் முழுவதுமாக உலகை விட்டு நீங்கவில்லை … Read more

முல்லை பெரியாறில் புதிய அணை: கேரள கவர்னர் உரை: தமிழக அரசு எதிர்ப்பு| Dinamalar

திருவனந்தபுரம்: ” கேரள மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் திட்டத்தை மாநில அரசு முன்வைத்துள்ளது ” என சட்டசபையில் அம்மாநில கவர்னர் ஆரிப்கான் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பெரியாற்றின் குறுக்கே அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இதன் பராமரிப்பை, தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. ஆனால் முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு வலியுறுத்தி வருகிறது. இதனை … Read more

1000 ஏக்கர் நிலத்தைத் தத்தெடுத்த நாகார்ஜுனா

'கிரீன் இந்தியா சேலஞ்ச்' நிகழ்வு மூலம் தெலுங்குத் திரையுலகத்தின் சினிமா நடிகர்கள், நடிகைகள், பிரபலங்கள் மரக்கன்றுகளை நடுவதை கடந்த சில வருடங்களாகச் செய்து வருகின்றனர். தெலங்கானா மாநில ராஜ்ய சபா எம்.பி.யான சந்தோஷ்குமார் இதை முன்னின்று செய்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் 1000 ஏக்கர் நிலத்தைத் தத்தெடுக்க உறுதி அளித்திருந்தார் நாகார்ஜுனா. அதன்படி வனத்துறைக்குச் சொந்தமான செங்கிசெல்லா காட்டுப் பகுதியில் 1000 ஏக்கர் நிலத்தைத் தத்தெடுத்துள்ளார். அங்கு அவரது அப்பா மறைந்த நடிகர் நாகேஸ்வர ராவ் … Read more

சுறா மீன் தாக்கி ஒருவர் பலி சிட்னி கடற்கரைகள் மூடல்| Dinamalar

சிட்னி:கடலில் குளித்து கொண்டிருந்த ஒருவர், சுறா மீன் தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில், மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு தலங்களுள், கடற்கரையும் ஒன்று. இங்கு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர், கடலில் குளித்து மகிழ்வர்.சமீபத்தில், சிட்னிக்கு அருகில் உள்ள லிட்டில் பே என்ற கடற்கரையில், கடலில் குளித்து கொண்டிருந்த ஒருவரை சுறா மீன் தாக்கியது. இதில் அவர் உயிரிழந்தார். இது தொடர்பான, ‘வீடியோ’ சமூக வலை தளங்களில் வெளியாகி … Read more