கண்களை கூசாத புது ஹெட்லைட்| Dinamalar

டெட்ராய்ட்:எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத உயர் தொழில் நுட்ப முகப்பு விளக்கை வாகனங்களில் பொருத்த அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இதுகுறித்து, அமெரிக்க நெடுஞ்சாலை பாதுகாப்பு கட்டுப்பாட்டு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வாகனங்களில் பயன்படுத்தப்படும் முகப்பு விளக்குகளில் அதீத ஒளியால் எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விபத்துகளையும் ஏற்படுத்துகிறது. இதையடுத்து பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டன. தற்போது, ‘அடாப்டிவ் டிரைவிங் பீம் ஹெட்லைட்ஸ்’ என்ற முகப்பு விளக்கு மிகவும் பாதுகாப்பானதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. உயர் … Read more

பிஎம்டபிள்யூ கார் வாங்கிய ரம்யா பாண்டியன்

டம்மி டப்பாசு படத்தில் அறிமுமான ரம்யா பாண்டியனை அடையாளம் காட்டியது ஜோக்கர் படம். அதன்பிறகு ஆண்தேவதை, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படங்களில் நடித்தார். சினிமா வாய்ப்புகள் குறையவே சின்னத்திரை பக்கம் சென்றார். அங்கு சில நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்தார். பிக் பாஸ், குக்வித் கோமாளி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தற்போது இடும்புக்காரி, நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரம்யா பாண்டியன் பிஎம்டபிள்யூ சொகுசு கார் வாங்கி உள்ளார். புதிய காருடன் … Read more

புடவையில் சொக்க வைக்கும் சுஹானா கான்

ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஷாரூக்கான். அவருக்கு இளம் வயதில் ஒரு மகன், மகள் இருக்கிறார்கள். கடந்த வருடம் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் ஏலப் போட்டியில் ஷாரூக்கானுக்குச் சொந்தமான கோல்கட்டா அணி சார்பாக ஷாரூக்கின் மகன் ஆர்யன் கான், மகள் சுஹானா கான் கலந்து கொண்டனர். ஷாரூக்கான் மகன் ஆர்யன் எப்போது சினிமாவில் நடிக்கப் போகிறார் என்பது … Read more

பார்லியில் பொய் தகவல் கூறிய எதிர்க்கட்சி தலைவரை விசாரிக்க அனுமதி| Dinamalar

சிங்கப்பூர்:சிங்கப்பூர் பார்லி.,யில் பொய்யான தகவல் கூறிய குற்றச்சாட்டின் பேரில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் உள்பட இரு எம்.பி.,க்களிடம் அரசு வழக்கறிஞர் விசாரணை நடத்த வேண்டும் என பார்லி., பரிந்துரைத்துள்ளது. இந்திய வம்சாவளி தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் பார்லி.,யில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ப்ரீத்தம் சிங் உள்ளார். இவர் மற்றும் இவரது கட்சி எம்.பி., பைசல் மனாப் மீது பார்லி.,யில் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியதாக புகார் எழுந்தது.இதுதொடர்பாக பார்லி., … Read more

மகிழ்ச்சி!வேகமாக குறைகிறது மூன்றாவது அலை:இனி நிம்மதி பிறக்கும் என நம்பிக்கை| Dinamalar

புதுடில்லி:’நாடு முழுதும் உள்ள, ‘மெட்ரோ’ நகரங்களில் மூன்றாவது அலை பெரும் அளவில் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதால், வரவிருக்கும் மாதங்கள் நிம்மதி அளிக்க கூடியதாக இருக்கும்’ என, மரபணு வரிசை பரிசோதனை பிரிவின் மூத்த ஆய்வாளர் தெரிவித்தார். கொரோனா தொற்று பரவலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், உருமாறிய, ‘ஒமைக்ரான்’ வகை கொரோனா தொற்று தென் ஆப்ரிக்காவில் துவங்கி, உலகம் முழுதும் பரவியது.கடந்த ஆண்டு டிச., இறுதியில் நம் நாட்டில் மூன்றாவது அலை துவங்கியது. … Read more

ஆர்சி 15 : ஷங்கர் – ராம் சரணுக்கு அதிர்ச்சி

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துவரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு ராஜமுந்திரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கதையின் தேவைக்கு ஏற்ப இயக்குனர் ஷங்கர் திறந்தவெளியில் சில முக்கிய காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார். இதன் காரணமாக படப்பிடிப்பை காண பொதுமக்கள் அதிகளவில் வந்து சென்றதால் அந்த காட்சிகளை படம் பிடித்து வருபவர்கள் அதை ஆன்லைனில் பகிர்ந்து வருகிறார்கள். இது படக்குழுவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக தயாரிப்பாளர் தில் ராஜுவின் குழுவினர் சோசியல் … Read more

நான்கு நாள் வேலை; பெல்ஜியம் அறிவிப்பு| Dinamalar

பிரசல்ஸ் : வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது.கடந்த, 2021 செப்.,ல் ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்து, சோதனை அடிப்படையில் வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஐஸ்லாந்து, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகளும் சோதனை அடிப்படையில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிவித்தன. எனினும், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தான், முதன் முதலாக, 2021 டிச.,ல் நான்கு நாள் வேலையை அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தியது. இந்நிலையில், … Read more